Thursday, November 3, 2011

எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம






'படிக்கும் போது தவம் செய்யலாமா?
இரவில் செய்யலாமா என்றெல்லாம்
கேட்பார்கள் . தவத்திற்கு காலமும் வேண்டியதில்லை திசையும்
வேண்டியதில்லை . அறிவை
விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சிதான் தவம்.
அதற்கு காலம் நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தகாலத்திலும்
செய்யலாம் இதையெல்லாம் உணர்ந்து
நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம்
செய்து வருகிறீர்களோ அந்த அளவிற்கு விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை தீர்த்துக்கொள்ளவும், சிக்கல்கள் வராமல் காத்துக்கொள்ளவும் வேண்டிய விழிப்பு
நிலையை இந்த தவம் உங்களுக்குக்
கொடுக்கும்'

எண்ணப் பதிவு --- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி



ஒரு எண்ணம் ஒருமுறை மனதில் தோன்றிவிட்டால் போதும், அது உயிரணுக்களில் பதிவாகி, அவற்றுக்கிடையே பிரதிபலித்து, அந்தப் பிரதிபலிப்பு மீண்டும் பதிவு, மீண்டும் பிரதிபலிப்பு என்றாகி அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். இதுவும் எண்ணத்தின் இயற்கை. எனவே, ஒரு தீய எண்ணத்தை ஒருமுறை உள்ளே விட்டு விட்டால்போதும், மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.விருந்தாளி - வேண்டாத விருந்தாளியேயாயினும் முகத்தைச் சுளித்தால் போய்விடுவார். எண்ணத்தை விரட்ட விரட்டத்தான் மீண்டும் மீண்டும் வரும். விரட்டும் போது நீங்கள் அந்த எண்ணத்தோடு தான் உறவு கொண்டவாறே இருக்கிறீர்கள் என்பதே இதற்குக் காரணம்.அதுமட்டும் அன்று. வெறும் எண்ணம் மட்டுந்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக்கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால், எழுந்த எண்ணம் சும்மா போய்விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனதில் நுழைந்து அது தனக்குச் செயலுருவம் கொடுத்துக் கொண்டு விடும். அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம்.

எண்ணம் எங்கும் செல்லும்



எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்கவேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை - நாமே விரும்பி, முயன்று - மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை - விழிப்புடன் - ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

"எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்".

எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.

தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும்.

எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது?

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Tuesday, August 16, 2011

உடல் நலம்

1. அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது. அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.
2. உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

3. வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும்.
உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

4. கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும். விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

5. நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது. ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.
6. நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

7. மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும். பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

8. உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulcer) நோயாக வழங்கப் பெறுகின்றது.

9. உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த் நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

10. எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்

Monday, August 1, 2011

வெற்றிக்கு வழிக்காட்டும் இலட்சியம்

Free desktop Wallpaper

இலட்சியம் இல்லாத மனமே
தோல்விகளில் துவண்டது போதும்
ஏளனங்களினால் வருந்தியது போதும்....
எழுந்திரு........ விழித்திடு........

உன் எதிர்காலத்தை
அடுத்தவனிடம் கையைக் காட்டி
கேட்காதே...........
உன்னால் முடியும் என்று
உன்னை தட்டி எழுப்பு........

முயற்சிகளில் தோற்பவன்
தோல்வியாளன் அல்ல‌
முயற்சிகளை விடுபவனே
தோல்வியாளன்........

முன்னேறியவனைக் கண்டு
பொறாமைப் பட்டது போதும் ‍ அவன்
முன்னேறிய வழியை
அறிந்துக் கொள்......

எனக்கு வழிக்காட்ட‌
யாருமில்லை என்று வருந்தாதே
நான் முன்செல்ல‌
பாதையில்லை என்று தேம்பாதே

இன்றே
விழித்தெழு துணிவுடன்
எடுத்து வை உனது முதலடியை
அதுவே
நாளை எல்லோரும்
பின்பற்றும் சரித்திரமாகும்.......

எல்லோரிடமும் அன்பாயிரு
ஆனால் அடிமையாகாதே
அன்பைச் செலுத்து
அதற்கு விலைப் பேசாதே........

சிந்திக்க பழகிக் கொள்
சிந்தித்ததை செயலாக்க கற்றுக் கொள்
செயலினை பழக்கமாக்க மாற்று
பழக்கத்தை வழக்க மாக்கு

விழுந்தாலும் பரவாயில்லை
மீண்டும் ஓட‌
உயிர் உள்ளதென்று
உறுதியுடன் எழுந்திரு.........

விழும் போதெல்லாம்
எழுந்திருப்பவனே வீரன்......

போராடு போராடு
வெற்றி பெற வேண்டுமென்று அல்ல‌
தோல்வி அடையக் கூடாதென்று......

இன்றைய
உன் தரித்திரத்தை எண்ணாமல் போராடு
"அச்சமில்லை அச்சமில்லை
உச்சிமீது வானிடிந்து வீழ்ந்த போதிலும்
அச்சமில்லை" என்ற
மீசைப் புலவனின் வரிகளை
மனதில் நினைத்து போராடு.....
உன் தரித்திரங்கள்
அதுவே
நாளைக்கு சரித்திரமாகும்......

நீ அடுத்தவர்
நிழலில் வளரும்
கொடியாயிராதே
அடுத்தவர்க்கு
நிழல் தரும்
விருட்சமாயிருக்க நினை......

விரைவில்
வெற்றி
உன்னைத் தேடி வரும்.......
வெற்றி உனதே..........

நீ
சாதாரணமானவன் அல்ல‌
நீ
சாதிக்கப் பிறந்தவன்.

Sunday, July 31, 2011

நண்பர்கள் தினம் - நண்பர்கள் கவிதை


நண்பர்கள் தினம் - நண்பர்கள் கவிதை

நண்பர்கள் தினம் 

"நண்பர்கள் தினம்..." 

நண்பர்களே.., 

கைகோர்த்து வாருங்கள் 
வேறொரு கிரகத்தில் 
குடிபெயர்வோம்-ஏனெனில் 
அங்கே "காலண்டர்" கிடையாதாம்... 

காலம், 
நம்மையெல்லாம் 
இடம்மாற்றி திசைமாற்றி 
எங்கோ இழுத்தாலும் 

நட்பின் பிறப்பிடமே 
உன்னைவிட்டு பிரிவேனோ..? 
பிரிவு என்பது வாழ்வின் அங்கம் 
துணிவு கொண்டு சந்திப்போம்... 

பிரியும் வேளையில் கண்ணீர் வேண்டும் 
அதுதானே நட்பின் சின்னம்... 

எதிர்பார்ப்பே வாழ்க்கை 
ஏமாற்றம் இயற்கையின் சீற்றம் 

எதிர்பார்ப்போம் 
நமது நட்பு நீடிக்கும்படி... 

நாம் சந்திக்கும் 
நாட்கலெல்லாமே- நமக்கு 
நண்பர்கள் தினம்தான் ... 

மீண்டும் நாம் 
சந்திக்கும் நாள் எதுவோ, 

ஆவலாய் இருக்கிறது 
அந்த இனிய நாள் நாளைவர 
காத்திருப்போம்... 

" நண்பர்கள் தின வாழ்த்துகள் ..."

Wednesday, July 27, 2011

மிகச்சரியானவை ,முழுமையானவை என்று எதுவுமில்லை


Tuesday, May 10, 2011

எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி



 உயர்ந்த சிந்தனையிருந்தால்;உயர்ந்த செயல்கள் பிறக்கும்.உயர்ந்த செயல்கள் இருந்தால்;உயர்ந்த பழக்கங்கள் உண்டாகும்.உயர்ந்த பழக்கங்களிருந்தால்; வாழ்க்கையே வெற்றியாகி விடும்.

இதுதான் 20ம் நூற்றாண்டின் அனைத்து கண்டுபிடிப்புகளையும் விட உயர்வான கண்டுபிடிப்பு என்கிறார் உளவியல் வல்லுநரான ஜேம்ஸ் ஆலன்.

மனிதன் தன்னுடைய படிப்பின் மூலம் வெற்றியடைய பெறுகிற அளவு இருபது சதம்தான். ஆனால், மற்ற தகுதிகள் மூலமே எண்பது சதம் வெற்றிகளைப் பெறகிறான்.

அந்த தகுதிகள்,அதாவது மனிதனின் சிந்தனைகளை மாற்றி வெற்றிபெற வைக்கும் தகுதிகள் என்னென்ன?

வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்
1.    உயர்ந்த குறிக்கோளை அமைத்தல் ( Definite aim).
2.    அதை அடையத் திட்டமிடுதல் ( Plan ).
3.    அதிகமாக உழைத்தல் ( Extra work).
4.    தன்னம்பிக்கை ( Self confidence ).
5.     சேமிப்பு ( Saving ).
6.    முதன்மையாக முயற்சித்தல் ( Initiative ).
7.    தலைமைப் பண்புகள் ( Leadership ).
8.     தணியாத ஆர்வம் ( Enthusiasm).
9.     கற்பனைத் திறன் ( Imagination )
10.     சுயக் கட்டுப்பாடு ( Self control).
11.    நல்ல பர்சனாலிட்டி ( Pleasing personality ).
12.     தெளிவான சிந்தனை ( Accurate thinking ).
13.    கவனமாக செயல்படுதல் ( Concentration).
14.     ஒத்துழைப்பு ( Co-opertation)
15.     தோல்விகளிலிருந்து கற்றல் ( Learning from the failure ).
16.     சகிப்புத்தன்மை ( Tolerance ).
17.     தெளிவும் உறுதியும் கொண்ட செயல்கள் ( Assertiveness).
18.    திறமையாக தொடர்பு கொள்ளுதல் ( Communication skills).
19.    சரியான நேர நிர்வாகம் ( Time management ).
20.     இயற்கை நியதிகளை ஏற்றுச் செயல்படுதல் ( Acception nature ).
இங்கு இரண்டு விஷயங்களைச் சொல்வது பொருத்தமாக அமையும்.

முதலாவது, விவேகானந்தரின் வாழ்க்கை, இரண்டாவது டால்டாயின் கதை.
விவேகானந்தர் மிகச்சிறிய வயதிலேயே உயர்வான அறிவையும் மனவலிமையையும் பெற்றவர்.

சிறுவனாக இருந்தபோது தன் தந்தையிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டார்.
முதல் கேள்வி :
” நீங்கள் எனக்காக என்ன செய்தீர்கள்?”
அதற்கு தந்தை சொன்னார், ”நீ கண்ணாடி முன் நின்று பார். உனக்கே தெரியும்” என்று.
இரண்டாவது கேள்வி :
“இந்த உலகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?”.
அதற்கு ” அரசனைக் கண்டு மயங்கிவிடாதே” என்றார்.
நம் உடலே பெரிய சொத்து செல்வத்தைக் கண்டு சபலமில்லாமலும், வறுமையைக் கண்டு தாழ்வடையாமலும் இருக்கின்ற நடுநிலை மனம், இவ்விரண்டும்தான் தன்னம்பிக்கைக்கும் உயர்விற்கும் முக்கிய அடிப்படை.

டால்ஸ்டாயிடம் ஒருவன் வந்து, ஐயா என்னிடம் ஒரு காசுகூட இல்லை என்று பிச்சை கேட்டான்.
அதற்கு டால்ஸ்டாய், ” உண்மையாகாவா?” என்றார்.
”ஆமாம்”.
”உன் கண்களையாவது ரூ. 20,000/- க்கு தருவாயா?”
”மாட்டேன்”.
”சரி, உன் கைகளையாவது ரூ. 10000/-  க்கு தருவாயா?”
அதற்கும் சம்மதிக்கவில்லை.

” சரி, உடலிலுள்ள இரண்டு உறுப்புகளில் ஒன்றை வைத்துக் கொண்டு மற்றொன்றை கொடுத்தாலும் நிறைய பணம் கிடைக்கும். நீயும் இயல்பாகவே உயிர் வாழ முடியும் தருவாயா?”
அதற்கும் அவன் மறுத்தான்.

டால்ஸ்டாய் சொன்னார், ” பல லட்சங்கள் பெறுமானமுள்ள உடலை வைத்துக் கொண்டு என்னிடம் பணம் இல்லை என்கிறாயே இந்தக் கண்கள், கைகள், கால்கள் என்றும் குறையாத பொக்கிஷம். இதைக்கொண்டு உழை, தங்கம், வெள்ளி மட்டுமில்லை சந்திரனும், சூரியனும்கூட உன்னுடையதாகிவிடும்”.

சபலமில்லா மனதிற்கும்,சுயமதிப்பு பெறவும் இவ்விரண்டு உதாரணங்களும் உதவும்.அநியாயமான ஆசைகளையோ அநியாயமான வழிகளையோ முயற்சித்தால் மிகவும் தாழ்வு.
எல்லா மனிதர்களும் பிறக்கும்போது ஒரே மாதிரியாகத்தான் பிறக்கிறார்கள்.
நடக்கத் தெரியாமலிருந்து நடக்கப் பழகுகிறார்கள்.
பேசத் தெரியாமலிருந்து பேசப் பழகுகிறார்கள்.
படிக்கத் தெரியாமலிருந்து படிக்கப் பழகுகிறார்கள்.
இங்கு கொடுத்துள்ள இருபது தகுதிகளையும் வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் அவ்வப்போது முயற்சி செய்து செயல்படுத்தினால் அதுவே பழக்கமாகிவிடும்.

சிறுசிறு மழைத் துளிகளே பெருவெள்ளம்.
சிறுசிறு மலர்களே பெரிய மாலை.
சிறுசிறு செங்கற்களே பெரிய கோபுரம்.
சிறு சிறு தகுதிகளே பெரிய
சாதனைகளாக அமையும்.
உங்களின் வெற்றிக்கு உறுதி

Sunday, April 24, 2011

வெற்றியின் விதைகள்

 


இருபுறமும் வெற்றி
வெற்றி பெறுவதற்கு மனித உறவுகளே மகத்தான துணைபுரிகின்றன.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கம் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது. அதாவது விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் எதிர்த்து விளையாடுபவரை தோற்கடிக்க வேண்டும். ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு சுற்றிலும் உள்ளவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
விளையாட்டில் “தோல்வி – வெற்றி” (Lose-win) நிலை உண்டு. ஆனால் வாழ்க்கையில் “வெற்றி வெற்றி” என்ற (Win – Win) நிலை மட்டுமே நிலையானது.
இலட்சியம்
நீங்கள், மற்றவரை தோற்கடித்து பெறும் வெற்றி நிலையானது அல்ல; அது நிம்மதியைக் கொடுக்கக்கூடியதும் அல்ல. ஆகவே இந்த அடிப்படைத் தத்துவத்தையும் புரிந்து செயல்பட வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் தனித்தன்மைமிக்க இலட்சியம் இருக்கலாம். அவர்களது இலட்சியம் பொது நன்மை தரக்கூடியதாக இருக்குமானால் அவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். அவ்வாறு உங்கள் உதவிக்கரம் நீளும்போது அவரும் உங்களுக்கு உதவ முன்வருவர்.
அவ்வாறு இல்லாமல் அவரின் பாதையில் நீங்கள் தடைக்கல்லாக மாறும்போது அவரும் உங்களின் பாதையில் முட்களை வீசத் தொடங்குவார். பின்னர், அம்முட்களை அகற்றவே உங்கள் வாழ்நாள் போதாதபோது உங்களால் எப்படி முன்னேற முடியும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
காற்றை நிராகரிக்க முடியாது
மற்றவரை வீழ்த்துவது நமது வாழ்க்கையின் நோக்கமல்ல;நாமும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றுவதுதான் நமது வாழ்க்கையின் நோக்கம்.
மற்றவர்களைவிட நீங்கள் சிறந்து விளங்க வேண்டுமானால் உங்களின் திறமைகளை வளர்க்க வேண்டும். மேலும் உங்களின் உழைக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் தற்போது எட்டு மணி நேரம் உழைக்கிறீர்கள் என்றால்அதை இரட்டிப்பாக்கவேண்டும். உளிபடாத கல் சிலையாவதில்லை அதுபோல உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை.காற்றை நிராகரித்து விட்டு உங்களால் உயரமுடியாது. அதுபோல உழைப்பை விவாகரத்து செய்துவிட்டு உங்களால் உயர முடியாது.
ஒத்துழைப்பு மலரட்டும்
ஆகவே, மற்றவர்களைப் பற்றி குறை கூறவும், மற்றவர்கள்மீது அவதூறு சொல்லவும் உங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கலாமா?
 ஒவ்வொருவரும்ஒவ்வொருவழியில்சென்றுகொண்டுள்ளார்கள். அவர்களின் பயணத்தால் இச்சமுதாயத்திற்கு தீங்கு நேராத வகையில் எந்தப் பயணமும் குறையுடையது அல்ல. மேலும், மற்றவர்களை குறை கூறுவதால் அவர்களின் எதிர்ப்பை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
ஒருவருக்கு நண்பர்கள் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் பகைவர்கள் இருக்கக் கூடாது. உங்கள் கருத்துக்குப் புறம்பான கருத்துக்கொண்டவர்கள் உங்களின் பகைவர்கள் அல்லர். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அதுவே பகையுணர்ச்சியாக மாறிவிடக் கூடாது.
நாம் சந்திக்காதவர்கள்கூட நண்பர்களாக இருக்கலாம்.ஆனால்,நாம் சந்திக்காத எவரும் பகைவர்களாக இல்லை. இதற்கு என்ன காரணம், நமது உறவில் அவர்கள் ஏதோ குறை கண்டுள்ளார்கள் அல்லது நம்மை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை அல்லது அவர்களை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை என்றுதானே அர்த்தம்.
ஒவ்வொருவருடைய நோக்கமும் வெவ்வேறாக இருக்கும்போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம்தான். மேலும், நோக்கம், ஒன்றாக இருந்து சிலசமயங்களின் பாதை வெவ்வேறாக இருக்கும்போதும் இவ்வாறு நிகழலாம்.ஆகவே நட்பைதக்கவைத்துக்கொள்ள எளியவழி குறை கூறுவதைத் தவிர்ப்பதுதான்.
தென்றலுடன் கை கோர்க்கும் மென்மையோடு செயலாற்றுங்கள். உறவின் கதவுகளை எப்பொழுதும் திறந்து வையுங்கள்.முயற்சி செய்தால் வானம்கூட குனிந்து உங்களுக்கு குடை பிடிக்கும்.

Thursday, April 21, 2011

உன் எதிர்காலம் உன் கையில்! சுவாமி விவேகானந்தர்



சுவாமி விவேகானந்தர் கூறியவைகளை, உன் எதிர்காலம் உன் கையில் என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.

நமது நோக்கம்

இயைபுடன் முன்னேறிய மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம்.

அவன் விசாலமான இதயம், பரந்த மனம், உயர்ந்த செயல் இவற்றைப் படைத்திருக்க வேண்டும்.

உலகத்தின் துயரையும் துன்பத்தையும் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்குத் தேவை. அத்துடன் நிற்காமல், அந்த உணர்ச்சியையும் அறிவையும் செயலாக்குபவனே நமக்கு மிகவும் வேண்டப்படுபவன்.

மூளை, இதயம், செயல் இவை ஒருங்கிணைந்து செயல்படுவதே தேவை.

நம்மை மேம்படுத்துவதன் முக்கியத்துவம்

நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.

நமது உடல்கள், நமது குணங்கள், நமது அறிவு, நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது உதாரணம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஒருவர் வருகிறார். அவர் நன்கு கற்றவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது மொழி நடை அழகாக உள்ளத. அவர் ஒரு மணி நேரம் உங்களுடன் பேசுகிறார். ஆனால் சொன்னதில் பெரிதாக எதுவும் உங்கள் மனதில் பதியவில்லை.

இன்னொருவர் வருகிறார். ஒரு சில வார்த்தைகளே பேசுகிறார். அவை நன்றாக ஒழுங்குப்படுத்தப்படவும் இல்லை. ஒரு வேளை இலக்கணப் பிழைகளும் அதில் காணப்படும். ஆனால் அவர் சொன்னது பேரளவிற்கு உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.

உங்களுக்குள் பலரும் இதை அனுபவித்திருப்பீர்கள். எனவே ஒரு போதும் வார்த்தைகள் மட்டுமே மனத்தின் பதிவை உண்டாக்கி விடுவதில்லை..

வாழ்நாள் முழுவதும் இனிமையாக…

http://ramanans.files.wordpress.com/2009/12/ramanar.jpg?w=477
பகவான் ஸ்ரீ ரமணர்

பிறருடைய குற்றங்களைப் பாராமல், குணங்களை மட்டுமே எண்ணிப் பார்க்கும் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இனிமையாகவே அமையும்.

விதியை வெல்லவும் அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு. ஆன்மா விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி. இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து நிற்பது மற்றொருவழி.

உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது.வீட்டைத் துறப்பதும் சந்நியாசமல்ல.உண்மையில்மனத்திலுள்ள பாசத்தையும் பந்தத்தையும் ஆசையையும்துறப்பதே சந்நியாசமாகும்.உலக வாழ்வைத் துறப்பவன் தன் அன்பின் பெருக்கால்,உலகையே மூழ்கடிக்கிறான். துறவென்பது உறவைச்சுருக்கிக் கொள்வதல்ல. உலகளவு பரந்து விரிந்தாய் ஆக்கிக் கொளவதே துறவின் லட்சணம்.

மரணத்திற்குபிறகுஎன்னஎன்பதற்குவிடைதேடவேண்டாம்.நிகழ்காலத்தில்வாழ்வோம்.எதிர்காலத்தைப்பற்றிக்கவலைப்படவேண்டாம்.எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.

மகிழ்ச்சி என்பதுமனிதனுக்குள்ளேயேஇருப்பதுதானேயன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று.

ஸ்ரீ ரமணர்.

Wednesday, April 20, 2011

புதுமைகள் படைத்திடு! புவனம் வென்றிடு!


மனித மூளையின் அமைப்பு வலது இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக (Hemisphere) இருப்பதை அறிவியல் பாடத்தில் அறிந்திருப்போம். அவை வலது பக்கத்து மூளை, இடது பக்கத்து மூளை.

இடது,பக்க மூளை ஐம்புலன்களோடு தொடர்புடையது. நாம் விழித்திருக்கும் போது அல்லது உணர்வோடிருக்கும்போது ஐம்புலன்வழி வருகிற, கிடைக்கிற செய்திகளை பகுத்து, தொகுத்து, ஆய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்து அந்த அனுபவங்களை பகுக்கும்போதும், தொகுக்கும் போதும் உண்டான எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது.

இந்த இடது பக்கத்து மூளை விழித்துக் கொண்டிருக்கும்போது மட்டும் செயல்படுகின்றது. இதனை நினைவு மனம் Conscious Min, Rational Mind, Objective Mind, Waking Mind, Surface Mind, Voluntary Mind, Male Min என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.

இந்த இடது பக்கத்து மூளை சிந்திக்கின்ற வேலையைச் செய்கின்றது. கணக்குப் போடும் வேலையை, காரண காரியங்களை கண்டறிகின்ற வேலையைச் செய்கின்றது.ஆனால், இந்த வலது பகத்து மூளையோ சிந்திக்கின்ற வேலையைச் செய்யாமல் இடது பக்கத்து மூளை தருகின்ற ஒட்டுமொத்த சிந்தனைகளையும், அனுபவங்களையும் அப்படியே வாங்கி அது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும், நிஜமான அனுபவங்களாக இருந்தாலும்,கற்பனையான அனுபவங்களாக இருந்தாலும் அவற்றைப் பதிய வைத்துக் கொள்ளுகிற நினைவு வங்கியாக (Memory Bank) கணினியின் நினைவுத்தகடு (Floppy Disk) போல செயல்படுகிறது.

நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது. சுயமாக சிந்திபது என்கிற ஆற்றல் அற்றது போல தோன்றகின்றது. இதனை ஆழ்மனம், Sub Concious Mind, Subjective mind, Sleeping Mind, Deep Mind, Involuntary Mind, Female Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.

இந்த வலது பக்க ஆழ்மனம் இடது பக்க நினைவு மனப்பகுதியால் வழி நடத்தப்பட்டு மிகப்பெருஞ்சக்தியாக, எல்லாவற்றுக்கும் தீர்வுகளை பெற்றுத்தருகிற, அற்புதங்களை ஆற்றுகிற அரேபிய கதைகளில் வருகிற அலாவுதீனின் அற்புத விளக்குபோல இந்திய இதிகாச புராணங்களில் செயல்படுகிறத காமதேனுவாக கற்பகத்தருவாக செயல்படுகிறது.

இந்த SubConcious mind என்று சொல்லப்படுகிற வலது பக்க மூளையே ஆழ்மனம். இதுவே கற்பனையின் நிலைக்களன். இதனைப் பயன்படுத்த அறிந்து கொள்கிறபோதுதான் புதியன படைக்கவும் உருவாக்கவும் நம்மால் இயலுகிறது.

சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை ஆல்பா (∂) பீட்டா(β) தீட்டா (σ) டெல்டா(δ) என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக சித்தர்களும், ஞானிகளும் அறிவியலார்களும் அறிந்து கூறுகிறார்கள்.
ஆல்பா நிலையில் மன இயக்கம 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும் (Cycles/Sec)
பீட்டா நிலையில் 13 சுற்றுகளுக்கு மேலும்
தீட்டா நிலையில் 4 முதல் 7 சுற்றுகளுக்குள்ளும்
டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கும் கீழாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.
பீட்டா நிலை என்பது விழிப்பு நிலை. உணர்ச்சிவயப்பட்ட மனம் வேகமாக இயங்கும் நிலை (Active and Agitated State)
ஆல்பா நிலை என்பது விழிப்பும் உறக்கமும் அற்ற தூங்காமல் தூங்கும் தியான, மோன நிலை (A Hypnotic State)
டெல்டா என்பது சமாதி நிலை.
நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது ஐம்புலன்களுக்கும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் தொடர்ந்து தகவல்களை ஆய்ந்தும், தொகுத்தும், பகுத்தும் கொண்டிருப்பதால் நினைவு மனம் அதிக இயக்கத்திலும் அதாவது விழிப்பு நிலையிலும் ஆழ்மனம் (Sub Conscious Mind) உறக்க நிலையிலும் இருக்கிறது.

உறக்க நிலையில் இருக்கிற ஆழ்மனத்தை வலது பக்க மூளையை வலது பக்க மூளையை விழிப்படையச் செய்ய, நினைவு மனத்தின் (Concious Mind) செயல்பாடுகளை இயக்க நிலையை குறைக்க வேண்டும். நம் ஐம்புலன்களுக்கும் உள்ள உலக தொடர்புகளை துண்டித்தால் நினைவு மனத்தின் செயல் குறையும். கண்களை மூடி உடலின் எந்த பகுதியிலும் இறுக்கமில்லாமல், தளர்வாக, வசதியாக, பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ அல்லது கால் பாதங்கள் தரையில் படிந்த நிலையில் நாற்காலியில் முதுகு, தலை நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமர்ந்த நிலையிலோ, இன்னும் சொல்லப்போனால் படுத்த நிலையிலோ (படுத்த நிலை உறக்கத்தை உடனே வரவழைத்து விடுவதால், உறக்கம் நினைவு மனத்தின் செயல்பாட்தை முழுவதுமாக தடை செய்து விடுவதால் இந்த நிலை பரிந்துரைக்கப்படுவதில்லை) ஓய்வான மனநிலையில் நம்முடைய மூச்சின் மீது கவனம் செலுத்தும்போது எண்ண அலைகள் அடங்கி மனம் அமையுற்று நினைவு மனத்தின் செயல்பாடு குறைகிறது. ஆழ்மனம் விழிப்படையத் தொடங்குகிறது.

நம்முடைய சுவாசமும் எண்ணங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைகள் சுவாசத்தின் வேகம் அதிகரித்தா எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும். ஆழ்ந்த சுவாசத்தை எடுத்து மெதுவாக காற்ற்றை வெளியேற்றும் செயலை கவனிக்கத் தொடங்கும்போது புதிய எண்ணங்கள் உருவாவதும், உருவான எண்ணங்களின் பின்னால் தொடர்ந்து செல்வதும், எண்ணங்களே வேண்டாமென்று நிராகரிப்பதும் நிகழ்வதில்லை. எண்ணமற்ற வழிக்கு இதுவே வழி. எல்லா தியான முறைகளையும் தொடங்குவதற்கு இந்த முறையைத்தான் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக அட்டாங் யோகத்தின் சமாதி நிலையை அடைய இதுவே வழி.

தியானம் என்ற சொல்லுக்கு ஏதாவது ஒன்றை எண்ணித்தியானிப்பது என்பது பொருள். அதாவது மனதில் சங்கல்பங்களை (முனைந்து உருவாக்கும் எண்ணத் தீர்மானங்கள் ) உருவாக்குவதும் ஒன்றையே தொடர்ந்து இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பதும் தியானம்.

ஆல்பா நிலையில் நினைவு மனத்தின் துணைகொண்டு எந்தப் பொருள் குறித்து, புதிய செய்திகள், உத்திகள் தேவையோ எந்தப் புதிய கண்டுபிடிப்புகளுக்கு விடை தேவையோ, சிக்கல்களுக்கு தீர்வு வேண்டுமோ அது குறித்து சிந்தித்தால் அந்த எண்ணங்கள் ஆழ்மனத்தில் (வலது பக்க மூளையில்) பதிந்து உடனேயோ அல்லது மற்ற சமயங்களிலோ நம்முடைய மனதில் புதிய எண்ணங்களும், கற்பனைகளும் விடைகளும், உத்திகளும் ஊற்றெடுக்கும்.

இந்த ஆல்பா நிலை தியானத்தின்போது நாம் எது குறித்து சிந்திக்கின்றோமோ அது தொடர்பான மனப்படங்களை, காட்சிகளாக காண வேண்டும்.

மனித உடல் அழியக்கூடியது, ஆன்மா அழிவில்லாத்து என்பது போல மனித மனதில் உருவாகும் எண்ணங்கள் அழிவதில்லை. எப்படி ஒரு காந்த ஒலி, ஒளி (Audio & Video) நாடாக்களில் சப்தங்களும் காட்சிகளும் பதியவைத்து வைத்து வேண்டும் பொழுது அவற்றை இயக்கிப் பார்க்க முடிகிறதோ அதுபோல இதுவரை வாழ்ந்த இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லாவித மனிதர்களின் எண்ணங்களும் வான் காந்தத்தில் (Universal Magnetism) பதிய வைத்து பாதுகாக்கப்படுகிறது. வான்காந்தம் ஆற்றல் மற்றும் அறிவின் நிலைக்களன்.

பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையான செய்திகளை பெறமுடியும் என்று பெஞ்சமின் ஃபிராங்கிளின் போன்ற அறிஞர்கள் நம்பியிருக்கிறார்கள். எடிசன் போன்ற அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து செய்திகளை பெற்றுமிருக்கிறார்கள்.

ஆழ்மனம் நம்மை இந்தப் பிரபஞ்ச மனத்தோடு இணைக்கும் நடுநிலை மனம் நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் நாம் எந்த நிலையிலிருந்தாலும் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த பொக்கிஷம். இதற்காக பெஞ்சமின் ஃபிராங்கிளின் ஒரு உத்தியை பின்பற்றியிருக்கிறார்.

பெஞ்சமின் ஃபிராங்கிளின் கையில் ஒரு கூழாங்கலை வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியின் கைப்பிடியின் வெளியே கை இருக்குமாறு வைத்துக் தளர்வாக, ஓய்வாக்க் கண்களை மூடி அமர்ந்து கொண்டு உறங்குவதுபோல் இருப்பாராம். உறக்கம் வருகிறபோது கைப்பிடி தளரந்து கூழாங்கல் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலோகத் தகட்டின் மீது விழுந்து ஒலி உண்டாக்கும். அந்த நிலை தூங்காமல் தூங்கும் அறிதுயில் என்கிற ஆல்பா தியான நிலை.

இந்த நிலையில் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து சிந்திக்கும்போது மின்னல் கீற்றென சில சிந்தனைகள், விடைகள், தீர்வுகள் உண்டாகும். அவை பிரபஞ்ச பதிவிலிரந்து கிடைக்கும் செய்திகள். இந்த வகையான செயல்பாட்டிற்கு பின்னர் நாம் இதை மறந்து இருக்கும்பொழுது சில நேரங்களில் திடீரென்று சில சிந்தனைகளை மனம் உருவாக்கித் தரும். மனதை கசக்கிப் பிழிவதை விட (Brain Storminng) வலிந்து சிந்திப்பதை விட ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கும்பொழுதே கற்பனை ஊற்றெடுக்கும்.
கற்பனை, படைப்பாற்றல், புதியன உருவாக்கல் என்பது மாற்றி யோசிக்கற ஒருமுறை. நேரடசி சிந்தனை (Straight Thinking) கணக்குப்போடுவது போல் பக்கவாட்டுச் சிந்தை (Lateral Thinking) என்பதுதான் புதிய சிந்தனை, மாறுபட்ட சிந்தனை, கற்பனை.

ஆண்டாண்டு காலமாக கிருஷ்ண பகவானுக்கும் நண்பர் குசேலருக்கும் உள்ள நட்பைப் பற்றிய இதிகாச கதைகளைக் கேட்டு நட்பின் மகத்துவத்தை பாராட்டிய நாம் 28 குழந்தைகளைப் பெற்ற குசேலர் வறுமையில் வாடியதாகவும் உதவிக்கு கிருஷ்ணரை நாடியதாகவும் கதை கேட்டு சிந்திக்காமல் விட்டுவிட்ட நிலையில் ஒரு மாணவன், இருபத்தெட்டு குழந்தைகளில் முதல் எட்டு குழந்தைகள் இருபது வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெற்றோர்களோடு சேர்ந்து ஏறத்தாழ பத்துபேர் உழைக்கும் வயதிலிருந்தும் உதவிபெறவேண்டிய குடும்பமாக இருந்தது. என்றால் குடும்பத்தில் பிழை என்று குற்றம் சாட்டுகிற சிந்தனை பக்கவாட்டு சிந்தனை மாத்தி யோசிக்கும் புத்தி.

இப்படி மாற்றி யோசிக்கிற Lateral Thinking இல்லையென்றாலும் Permutation Combination என்கிற முறையில் புதியன உருவாக்க எளிய வழிமுறையில் முயலலாம். பூச்சியம் முதல் ஒன்பது வரை பத்து இலக்கங்களை வைத்துக் கொண்டு எல்லையற்ற (Infinite Numbers) புதிய எண்களை உருவாக்குவது போல எல்லா வகையிலும் மாற்றி மாற்றி இணைத்து புதியன படைப்பது எளிது. மனமும் முயற்சியுமே தேவை.

 புதியனபடைக்கிறவர்கள்சாதனையாளர்கள்,திறமைசாலிகள்,வணங்கத்தக்கவர்கள்.
மாற்றி யோசித்தால் மாநிலமே பாராட்டும்.

புதியன படைக்கப்படுகின் போது மகிழ்ச்சியும், ஆனந்தமும் பிறக்கின்றது. மனித மனங்கள் படைப்பாளிகளால் கவரப்படுகிறது.

புதியன பயன்பாட்டிற்கு எளிமையாகவும், மனத்தளர்வு நீக்குவதாகவும் சலிப்பு போக்குவதாகவும் அமைகிறது.

கற்பனை செய்ய முடியாதவை நிஜத்தை அடைவதில்லை. கற்பனைக் கோட்டைகளே நிஜக் கோட்டைகளுக்கு அடிப்படை வெற்றிக்குத் தேவை கற்பனைத்திறன்.

கற்பனை காலத்தை வெல்லும் செல்வத்தைச் சேர்க்கும்.

Monday, April 18, 2011

உங்கள் எண்ணங்களே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது!


 வேலைகளில் மிகக்கடினமான வேலை உங்கள் குழுவில் மனிதர்களை எப்படி நிர்வகிப்பது என்பதுதான்”.நிர்வாகத் திறமை என்பது உங்கள் குழுவில்உள்ளவர்களைஎப்படிஊக்குவிப்பதுஅவர்களுக்குவேலைகளில்வரும்பிரச்சனைகளை,சவால்களை எப்படி எதிர்நோக்குவது அதில் இருந்து எப்படி மீண்டு வரச் செய்வது என்பதை குழுவை வழிநடத்தும் தலைவர் எந்த அளவுக்கு செய்கிறார் என்பதைப் பொருத்து உள்ளது.

ஒவ்வொரு மனிதனும் எண்ணத்தால், செயலால், செய்து முடித்திடும் திறனால் வேறு பட்டவர்கள் என்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை. ஆனால் ஒரு நிறுவனத்தில் வேலைகளை பங்கிட்டு கொடுக்கும் போதும், செயலை முடிக்கும் திறனை கணக்கிடும் போதும், அது எதிர்பார்த்த அளவு, முழுமையாக நிறைவேற்றப் பட்டுள்ளதா என்பதை அறியும் நாம் தனிமனிதனில் உள்ள வேறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

இதோ சில குறிப்புகள்
இந்த மாதிரி மனித ஆற்றலை நிர்வகிக்கும் போது பொதுவாக நான்கு வகையான வழிமுறைகளை கையாளவேண்டும்.
1. செயல்படுத்தும் உங்கள் எண்ணம் (Attitude) என்ன என்பதை மற்றவர்களுக்கு முழுமையாகப் புரிய வையுங்கள்.
2. உங்களிடம் உள்ள மற்ற உறுப்பினர்களுடன் தொடர்பை அதிகப்படுத்துங்கள்.
3. உங்களிடம் ஒத்த எண்ணங்களை (consciousof mind) அவர்களிடம் உருவாக்க முயற்சி செய்யுங்கள்.
4. செய்யும் திறமையை (performance) மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.
இவற்றை தொடர்ந்து செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.அதனால் உங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
உதாரணமாக ஆராய்ச்சித்துறை சார்ந்து இருப்பவரை எடுத்துக் கொள்வோம்.

வெற்றி பெற்ற விஞ்ஞான கண்டு பிடிப்புகள் ஒரு தனிமனிதனின் விஞ்ஞான அறிவுத்திறனால் மட்டுமேஅமைவதில்லை.இதில் வேளாண்மை ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற எம்.எஸ்.சுவாமிநாதனை எடுத்துக் கொள்ளுங்கள். ராக்கெட் தொழில் நுட்பத்தில் சிறந்த விஞ்ஞானி என்ற பெயர் எடுத்த பின்பு நாட்டின் ஜனாதிபதி ஆகிய அப்துல் கலாமை எடுத்துக் கொண்டாலும் சரி. இந்த விஞ்ஞானிகளில் உள்ள தனிப்பட்ட குணம், தன்னைச் சார்ந்த ஆசிரியர்கள்,தன்னுடன் பணிபுரிந்த இளம் விஞ்ஞானிகள், மாணவர்கள் இவர்களை எப்படி அவர்கள் கையாண்டார்கள் என்பதைப் பொறுத்து அவர்களின் வெற்றி அமைந்தது!

வெறும் அறிவியல் அறிவு மட்டுமே விஞ்ஞானிகளை சிறந்த கண்டுபிடிப்புகள் உருவாக்கச் செய்யும் என்று சொன்னால், இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் என்றோ நோபல் பரிசு பெற்று இருப்பார்கள். அவ்வளவு திறமையான விஞ்ஞானிகள் நம்மிடம் உள்ளார்கள்.

ஏன் நம்மால் இன்னும் நோபல் பரிசு அறிவியல் ஆராய்ச்சியில் வாங்க முடியவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. நம்மிடம் உள்ள அறிவியல் கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தொலைநோக்கு திட்டம், முழுமையான செயல்பாடாய் இல்லாமலும், அறிவியல் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் செலுத்தும் முழுமையான ஈடுபாடு, தொழில் தர்மம் இவைகள் குறைவாக இருப்பது போன்ற பல காரணங்களை சொல்லிக் கொண்டு செல்லலாம்.

இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான வேளாண்மை விஞ்ஞானிகள் உள்ளார்கள். ஆனால் எம்.எஸ். சாமிநாதன் மட்டுமே உங்களுக்கு தெரிகிறது. இதை அவர் எப்படி சாதித்து இருப்பார், அறிவியல் அறிவு மட்டுமா அவரை சிறந்த விஞ்ஞானியாக உலகத்திற்கு காட்டியது.

விண்வெளி ஆராய்ச்சியில் எவ்வளவு விஞ்ஞானிகள் வேலை செய்கிறார்கள். எப்படி அப்துல் கலாமை மட்டும் மக்களுக்கு ராக்கெட் விஞ்ஞானியாகத் தெரிந்தது.

அறிவியல் அறிவு மட்டுமே வைத்து சிந்தித்து விஞ்ஞானியாக முடியாது. அதனுடன் எப்படி தன்னுடன் உள்ள ஆராய்ச்சியாளர்களை மனித அறிவினால் நிர்வாகம் செய்தார்கள் என்பதிலேயே அவர்கள் வெற்றி அடங்கி இருக்கிறது.

வெற்றி பெற்ற விஞ்ஞானியாக வேண்டுமா. உங்களைச் சார்ந்த ஆராய்ச்சி குழுவை எப்படி நீங்கள் நிர்வகிக்கிறீர்களோ அதில்தான் உங்கள் வெற்றி அடங்கி இருக்கிறது. இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். அதைத் தான் அனைத்து நிறுவனங்களும் “HR Manager” மனித வள மேம்பாட்டு இயக்குனர் என்று ஒருவரை வைத்து, தன் நிறுவனத்தை முன்னேற்ற முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் ஏன் அனைத்து நிறுவனங்களும் வெற்றி பெற்ற நிறுவனங்களாக திகழ முடிய வில்லை.இன்றும் அவர்களால் முழுமையாக செயல்படுத்த முடியாமைதான் காரணம்.

அந்தமுழுமையாகசெயல்படுத்தமுடியாத,இன்றும்அனைவரும் விரும்புகின்ற நிர்வாக உத்திகள் என்ன!
வேலை செய்யும் எண்ணத்தை ஊக்குவித்தல்.
சில மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தான் செய்யும் வேலை தனது முன்னேற்றத்திற்கு உதவும்,இதனால் தனக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கும் என்ற எண்ணத்தை உண்டாக்க வேண்டும்.
இதை உண்டாக்க சில ஈடுபாடு உடைய மாணவர்களுக்கு ஒரு முறை சொன்னால் அதை புரிந்து கொண்டு யோசிக்காமல் செயலில் இறங்கி விடுவார்கள்.

சில மாணவர்கள் பலமுறை நீங்கள் சொன்ன கருத்தை யோசிப்பார்கள், இவ்வளவு கடின வேலை செய்துதான் முன்னேறமுடியும?ஏதாவது குறுக்குவழிகள் உள்ளனவா எளிதாக வெற்றி பெற…இந்த மாணவர்களுக்கு நீங்கள் அதிகம் நேரம் செலவழித்து,உண்மையான நிலையை உதாரணத்துடன் விளக்க வேண்டும், மேலும் நீங்கள் ஒரு முன்மாதிரியாக உழைத்துக் காட்ட வேண்டும்.

இன்னும் சிலர் நீங்கள் என்னதான் அறிவுரை சொன்னாலும்,முன் உதாரணமாகஇருந்தாலும்,தங்களுக்குக்கொடுத்தவேலையில் முழுக்கவனம் செலுத்தத் தயங்குவார்கள்.

இவர்களை எப்படி கையாள்கிறீர்கள் என்பதிலேயே உங்கள் வெற்றியின் இரகசியம் அடங்கி இருக்கிறது.

எதையும் ஏற்றுக்கொள்.
ஜீரணம் செய்யக் கற்றுக்கொள்.
இதுவே வெற்றி வாழ்வின் இலக்கணம்.
- மார்க் டவைன்

Sunday, April 17, 2011

விடியலை நோக்கி….


“The best way to find yourself is to lose yourself in the service of others” – நமது தேசத் தந்தையின் பொன்மொழிகள் இவை.  காந்தி செய்த அரசியலும், இன்றைய தலைவர்கள் செய்யும் அரசியலும் முற்றிலும் நேர்மாறானது. காந்தியடிகள் அரசியலை ஒரு சேவையாக (Service) செய்தார்.  இன்றைய தலைவர்கள் அரசியலை தன்னை வளர்த்துக் கொள்தற்கான ஒரு தொழிலாகக் (Profession) கருதுகிறார்கள்.
சரியான வழிகாட்டல்
“எந்தக் குழந்தையும்நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன்
ஆவதும் தீயன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே!”

சிறுவயது முதல் மனித சமுதாயத்திற்குத் தேவை சரியான வழிகாட்டல், தன்னலமற்ற அன்புடன், தனது குழந்தையின் உயர்வுக்காகப் பாடுபடும் அன்னையப்போல், தனது நாட்டு மக்கள் உயர்வினைக் கருத்தில் கொண்டு பாடுபடும் தலைமையே சரியான வழிகாட்டுதலாக அமைய முடியும்.  தனது பெண்டு,பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக பொது வாழ்வில் ஈடுபடுபவர்களின் செயலினால்தான் இன்று சமுதாயம் தடம் மாறுவதாகக் கூறினார் பெரியார்.

தலைமைப் பண்புகள்
The king must be the Philosopher Ruler என்கிறார் கிரேக்கத் தத்துவஞானி பிளாட்டோ, எத்தனை சரியான வரிகள்.  தத்துவவாதியான ஒருவனுக்குதான் பண்பற்ற மற்றும் இவ்வுலகத் தேவைகளை சரியாகக் கணிக்கின்ற பக்குவம் இருக்கும்.  இவர் இந்த சமுதாயத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார்.

ஒன்று Appetite Group இரண்டு Reasoning Group மூன்று Spirit Group.  பெரும்பாலும் சமூகத்தின் 98 சதவிகித்த்தை ஆக்கிரமிப்பது இந்த Appetite Group தான்.  அவர்கள் தான் மற்றும் தனது நிம்மதியான வாழ்வுடன் திருப்தி அடைவர்.  இவர்கள் ஆளும் திறமை அற்றவர்கள். இவர்களால் பின்தொடர்ந்து மட்டும்தான் செல்ல முடியும்.  ஆனால் மீதமுள்ள இரண்டு சதவீதத்தினர் அதாவது Spiritமற்றும் ReasoningGroup யை சேர்ந்தவர்களே ஆளப்பிறந்தவர்கள்.  அதாவது தலைமைப்பண்பு கொண்ட தத்துவவாதிகள்,முக்கியமாக பிறருக்காக சிந்திப்பவர்கள்.இந்த தத்துவவாதிகளை மட்டும் தலைவர்களாக நாம் ஏற்றுக் கொள்ளும் பாங்கு உருவாக வேண்டும் அல்லது தலைமை விரும்பும் இளைஞர்கள் தத்துவ வாதிகளாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் மாட்சிமையுடைய சமுதாயத்தை உருவாக்க முடியும்.

இலட்சிய இலக்கு
மாக்கியவல்லியின் கூற்றுப்படி ஒரு அரசனாகப்பட்டவன் எந்த வழியிலாவது தனது நாட்டின் இலட்சிய இலங்கை அடையத் தயாராக இருக்கவேண்டும்.அவனுக்கு தனது நாட்டின் முன்னேற்றமே இலட்சியமாக இருக்க வேண்டும்.  ஹிட்லர் ஒரு கொடுங்கோலன். ஆனாலும் தனது நாட்டின் மீது தன்னலமற்ற அன்பு கொண்டிருந்தார்.

தேவை சரியான தலைமை
“தலைவர் எவ்வழி தொண்டர் அவ்வழி” . தலைமையை உருவாக்கும் பெரும் பொறுப்பு யாருக்கு உள்ளது? இச்சமூகத்திற்கு,அதாவது நமக்கு சிறுவயது முதலே குழந்தைகளை,சமுதாய அக்கறை கொண்ட மனிதனாக வளர்க்க வேண்டும்.இன்று சமுதாயத்தினால் புறக்கணிக்கப்பட்டு திக்குத் தெரியாமல் தவிக்கும் பலருக்கு அரசியல் ஒரு புகலிடமாக உள்ளது. அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல்” என்ற பெர்னாட்ஷாவின் கூற்றை இது மெய்ப்பிப்பதாக உள்ளது.இந்த நிலை மாற வேண்டும்.  சிறந்த வல்லமையுடைய மனிதர்கள் சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றார் பிளாட்டோ அந்த வல்லமையுடைய மனிதனுக்கு தலைமை ஏற்று நடத்த நாம் வாய்பளிக்க வேண்டும்.

“உலகத்தின் வரலாறு என்பது அது தனி மனிதர்களின் வரலாறுதான்!  ஆனால் அந்த தனி மனிதர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள்” என்றார் விவேகானந்தர்.  தன்னம்பிகை மிக்க, தன்னலமற்ற தனி மனிதர்களை தலைவர்களாக்குவதன் மூலம் நமது தேசத்தின் வரலாற்றை மாற்றி அமைப்போம். விடியல் மிக அருகில் உண்டு.

Saturday, April 16, 2011

வாழும்போதே நீ வானத்தைத் தொட்டுவிடு


     வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்ததொரு “இலட்சியம்” இல்லாவிட்டால் மனிதன்,கேவலம் மிருகமாய்ப் போய்விடுவான் என்று சுவாமி விவேகானந்தர் கூறிய இந்த வார்த்தைகளை சிறிதளவாவது சிந்தித்துப்பார்.மகத்தான செயல்கள் யாவும் முதலில் “முடியும்” என்ற நம்பிக்கையில் தொடங்கப் பட்டவைகள் தான். எனவே தொடங்குவதை ஒழுங்காகத் தொடங்கு முடிவைப்பற்றி நீ கவலைப்படாதே. அதனை என்னிடம் ஒப்படைத்து விடு என்று கிருஷ்ணபரமாத்மா கூறியதை நினைவில் கொள்.

         உன் சரித்திரம், நீ சாதிக்கப்பாடுபடும் சாதனைகள், உன்னை உலகினுக்கே அடையாளம் காட்டும் சாதனைகள்,உன்னை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் சாதனைகள், அதனை அடைவதற்கு நீ செய்யும் முயற்சிகள், உனது ஆழமான எண்ணத்தின் தூண்டுகோல்கள், உன்னவழிநடத்தும்மனத்தின்உற்சாகங்கள்,உன்வாழ்வில்ஒளியேற்றும்உன்னதக்குறிக்கோள்கள்,உனக்கு என்றும் மகுடம் சூட்டி மகிழும் மகோன்னத மனத்தின் இலட்சியங்கள்தான் உன்னை வழிகாட்டி அழைத்துச் செல்லும் வாழ்க்கையின் நங்கூரங்கள்.

“நெப்போலியன் ஹில்” கூறியதைப் போன்று நமக்கு என்னென்ன வேண்டும் என்பதை நமது மனதில் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கான முயற்சியை உண்மையாகவே ஒரு மனதோடு செயலாக்க வேண்டும்.ஒவ்வொன்றும் நாம் நினைத்தபடி நம்மை வந்தடைவதை நாம் காணலாம். நான் எதையும் “சாதிக்கும் ஆற்றல் பெற்றவன்”என்று தினசரி தன்னம்பிக்கையுடன் சொல்லிப்பார். தன்னம்பிக்கையுடன் சொல்லும் போது எவ்வளவு பெரிய துன்பமும் ஓடிப்போகும். “நம்மால் முடியும்” என்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதை நீ வெற்றிகரமாக சாதித்துவிடலாம்.

மகனே, ஒன்றை மட்டும் நினைவில் கொள். “முடியும்” என்ற நம்பிக்கையுடன் எந்தக் காரியத்தையும் தொடங்கி உற்சாகத்துடன் செய்தால் வெற்றி உறுதி உனக்கு.முயன்றால் முன்னேறலாம். வாழ்க்கையில் நீ எதுவாக வேண்டும் என நினைக்கிறாய்? முதலில் உள்ளத்தில் அந்த எண்ணம் கருக்கொண்டு உருப்பெறச் செய். வாழ்க்கையில் எதற்காகவும் அஞ்சாதே. எதற்காகவும் கலங்காதே. எந்தச் சிக்கலுக்கும் தீர்வு உண்டு. அதற்கான ஆற்றல் உனக்கு உண்டு. அதனை உணர்ந்து செயல்படுத்து. ஆசைக்கு இடம் கொடுக்காதே. அறிவுக்கு இடம் கொடுத்து ஆலயவாசலைத் திறந்திடு.நான் நன்றாக இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நான் பெரிதாகச் சாதிக்கப் போகிறேன் என்று எப்போதும் எண்ணியபடி இரு. இப்படி இருந்தால் யானை பலம் உனக்கு. ஊக்கமும், ஆர்வமும் இருந்தால் நீ எண்ணியபடி உயர்ந்த இலட்சியத்தை அடைந்துவிடுவாய். துணிச்சலான ஆரம்பம்தான் உன்னைத் தூண்டிவிடும் கிரியா ஊக்கி. “துணிவில்லாதவனின் வாணிபமும், பணிவில்லாதவனின் ஊழியமும் பயன்படாது”என்பதை மனதிலிருத்தி துணிவோடும், பணிவோடும் உன் இலட்சியப் பயணத்தில் அடியெடுத்து வை. உன்னை நிச்சயம் உலகம் பார்க்கும். “பயம் சாதிக்காததை நயம் சாதிக்கும்” என்பதை மறந்து விடாதே.யானைக்கு தும்பிக்கை போல மனிதனுக்கு “நம்பிக்கை” தான் எல்லா செயலுக்கும் அடிப்படை. “கெடு” நிர்ணயிக்க வேண்டும். இவ்வளவு காலத்திற்குள் இதனை நாம் அடைந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உனக்குள் ஏற்பட்டால் தான் அது உன்னைப்பிடித்து உந்தித்தள்ளும். உன்னுடைய லட்சியத்தை நீ எட்டிப்பிடித்திடுவாய். “லட்சியம்” மட்டும் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கட்டும்.

மகனே,வாழத்துடிப்பவர்கள்தான்வாழமுடியும்.வகையறிந்து வாழ்கிறவர்கள் தான் நீண்ட நாள் வாழ முடியும். “வாழ்வோம்” வாழ்ந்தே தீருவோம் என்று உறுதி எடுத்துக் கொண்டு வாழ்ந்து காட்டு. உலகம் உன்னை வியந்து

Friday, April 15, 2011

உன்னால் முடியும்



இளைஞனே உன்னால் முடியும்

நம்மால் சாதிக்க முடியும். முடியாது என்பது முட்டாள்களின் அகராதி. முடியும் என்பதுதான் அறிஞர்களின் அகராதி என்கிறார் சாக்ரடீஸ்.

மனிதனால் முடியாதது எதுவும் இல்லை. சின்ன சின்ன தோல்விகள் தான் வெற்றிக்கு வழிவகுக்கும். தோல்வியை கண்டு நடுங்கினால் வெற்றியை ருசிக்கமுடியாது.எடுத்த எடுப்பிலே நாம் வெற்றியை பெற்று விட முடியாது. ஒருவேளை நாம் வெற்றி பெற்றிருந்தாலும் அது சரியான வெற்றியாக இருக்காது.

ஒரு மனிதனுக்கு குறிக்கோள் என்பது மிக முக்கியமானது.

குறிக்கோள் இல்லாத மனிதன் அரை மனிதன் என்று அறிஞர்கள் கூறுவார்கள்.குறிக்கோளை ஏற்படுத்திக் கொண்டால்தான் நாம் அடைவதை விரைவில் அடைய முடியும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். நாம் செய்யும் முயற்சி தான் நம்மை உயரச்செய்யும்.முயற்சி இல்லாமல் எதையும் அவ்வளவு எளிதாக செய்ய முடியாது. தெய்வத் தால் ஆகாது எனினும் முயற்சி தன்மெய்வருத்த கூலி தரும் என்ற குறளுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.ஒருவனுடைய தாழ்வு மனப்பான்மைஅவனைஅழித்துவிடும்,எண்ணங்களை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிஞர் வால் டோர் கூறியுள்ளார்.

ஒருவனுடைய தன்னம்பிக்கை தான் அவனை உயரச்செய்யும். தன்னால் முடியும் என்பதை அவன் நம்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னால் முடியும் என்னால் முடியும் என்று சொல்லி சொல்லி மனதிற் குள் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமானால் அதைப்பற்றிய திட்டமிடல் முதலிலேயே நமக்கு வந்துவிட வேண்டும்.

எதையும் திட்டமிட்டு செய்ய பழகி கொள்ள வேண்டும். அப்போதுதான் செய்யும் காரியத்தில் முழுமையான வெற்றியை நாம் பெறமுடியும்.

தாமஸ் ஆல்வா எடிசன்,மார்க்கோனி போன்ற அறிஞர்கள் எடுத்த எடுப்பிலே தங்கள் கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றுவிடவில்லை. அவர்கள் வெற்றிக்கு பின்னால் கடுமையான உழைப்பு, முயற்சி இருந்தது.

பறவையை பாருங்கள், தன் குஞ்சுக்கு கொஞ்ச கொஞ்சமாக தன்னம் பிக்கையை ஊட்டி பறக்க செய்கிறது.

வெற்றி என்ற பாதையை அடையும் முன் சறுக்கல்கள், தோல்விகள் எல்லாம் ஏற்படத்தான் செய்யும்,தடை கற்களை அப்புறப்படுத்தி ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தால் வெற்றி என்ற பாதையை நம்மால் அடைய முடியும்.

Wednesday, April 13, 2011

எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம

எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம



'படிக்கும் போது தவம் செய்யலாமா?
இரவில் செய்யலாமா என்றெல்லாம்
கேட்பார்கள் . தவத்திற்கு காலமும் வேண்டியதில்லை திசையும்
வேண்டியதில்லை . அறிவை
விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சிதான் தவம்.
அதற்கு காலம் நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தகாலத்திலும்
செய்யலாம் இதையெல்லாம் உணர்ந்து
நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம்
செய்து வருகிறீர்களோ அந்த அளவிற்கு விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை தீர்த்துக்கொள்ளவும், சிக்கல்கள் வராமல் காத்துக்கொள்ளவும் வேண்டிய விழிப்பு
நிலையை இந்த தவம் உங்களுக்குக்
கொடுக்கும்'

எண்ணப் பதிவு --- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி



ஒரு எண்ணம் ஒருமுறை மனதில் தோன்றிவிட்டால் போதும், அது உயிரணுக்களில் பதிவாகி, அவற்றுக்கிடையே பிரதிபலித்து, அந்தப் பிரதிபலிப்பு மீண்டும் பதிவு, மீண்டும் பிரதிபலிப்பு என்றாகி அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். இதுவும் எண்ணத்தின் இயற்கை. எனவே, ஒரு தீய எண்ணத்தை ஒருமுறை உள்ளே விட்டு விட்டால்போதும், மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.விருந்தாளி - வேண்டாத விருந்தாளியேயாயினும் முகத்தைச் சுளித்தால் போய்விடுவார். எண்ணத்தை விரட்ட விரட்டத்தான் மீண்டும் மீண்டும் வரும். விரட்டும் போது நீங்கள் அந்த எண்ணத்தோடு தான் உறவு கொண்டவாறே இருக்கிறீர்கள் என்பதே இதற்குக் காரணம்.அதுமட்டும் அன்று. வெறும் எண்ணம் மட்டுந்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக்கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்து விடலாம். ஆனால், எழுந்த எண்ணம் சும்மா போய்விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனதில் நுழைந்து அது தனக்குச் செயலுருவம் கொடுத்துக் கொண்டு விடும். அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம்.

எண்ணம் எங்கும் செல்லும்



எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்கவேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை - நாமே விரும்பி, முயன்று - மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை - விழிப்புடன் - ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

"எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவுஅறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்".

எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும்,உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.

தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும்.

எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது?

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி