Friday, December 10, 2010

GOOD WORDS


Doing is very good. But that comes from thinking file the brain, therefore, with High thoughts, highest ideals, place them day and night before you, and out of that will come great work.

Teach yourselves, teach everyone his/her real nature ,call upon the sleeping soul and will come, goodness will come, purity will come, and everything that is excellent will come, when this sleeping soul is roused to self-conscious activity.
- Swami Vivekananda

Patience, Forgiveness, Control of mind ,non-stealing, inner and outer purity, Control of senses, Cultivating satvik intellect, following the noble path, truthfulness, and non-anger-these are the ten characteristics of dharma – Manusmruti.

Human boby is transient, affluence will not last forever and death is ever-present in life, therefore, one should only earn merits through good actions [Dharma]  [i.e., one should always live a righteous life]
- Panchatantra.

Sunday, November 14, 2010

தியானம்! நான் யார்?

தியானம்! நான் யார்? என்பதை அறிவதற்கு.....


தியானம் என்பது என்ன?
இருக்கும் இடத்தில் இருப்பது.
நாம் நாமாக இருப்பது.
முழுமையாக இருப்பது.
மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.
உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.
மனதைச் சுத்தப்படுத்துவது.
இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.
ஓவ்வnhரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.
இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.
ஆனால் யதார்த்தத்தில்
நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்;லை.
இதுவே நாம் அறியாதது.

தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)
சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation) அல்ல.
ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.
தியானம் என்பது மனம் கடந்து செல்லவது.
மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.

தியானம்!
நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது.
அமைதி நம்மில் நிலவுவதற்கான
ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும்.
எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ
அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது.
கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது.
உலகத்திலிருந்து தப்பித்து ஒடமாட்டோம்.
இந்த உலகத்திலையே இருப்போம்.
ஆனால் நடைபெறும் அனைத்தையும்
ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்வோம்.
ஒரு அழாகான விளையாட்டாக ...
மிகப்பெரிய ஒரு நாடகமாக எடுத்துக்கொண்டு
ஆடிப்பாடி மகிழ்வோம்.
விளையாட்டுத்தன்மை உள்ளவர்களாக வாழ்வோம்.

நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பல உள்ளன. குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச் செய்வது.
டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல்,
டைனமிக் தியானம் ,
நம் கடந்த காலத்தை
நாம் அடக்கிய உணர்ச்சிகளை
நாம் அடக்கிய உணர்வுகளை
வெடிக்கச் செய்து
படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது.

நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால் பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும்.
இதை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது
முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.
உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது.
இதன் பின் மனதை அமைதியாக்குவது.
நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்துகொண்டே
நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான்.
உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது.
ஆனால் உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால்
மனதையும் வழிநடத்தலாம்.
மனம் அமைதி ஆக இருக்குமாயின்
அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.
நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை.
ஆனால் நம்பிக்கையுடன் இதயத்தை அனுகினால்
இதையும் அமைதியாக்குவது சாத்தியம்.
இதன்பின் நம் மையத்திற்கு
அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால்
நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம்.
இங்கு அமைதியாக இருக்கலாம்.
இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும்
பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.

முழு இயற்கையும் நடனமாடுகின்றது மனிதரைத் தவிர.
மனிதர்; இயற்கையை புரிந்துகொண்டால் கடவுளுக்கு மேலேயும் உயரலாம். புரிந்துகொள்ளவில்லை ஏனில் மிருக நிலைக்கு கீழேயும் விழலாம்.
மனிதருக்கு மட்டுமே சாத்தியமான சிறந்த ஆற்றல் இது.

ஓவ்வொரு நாளும் ஒரு நேரத்தை ஓதுக்குங்கள்.
மிகவும் வசதியாக கஸ்டம் எதும் இல்லாமல் இருக்குமாறு உடலை சரிசெய்யுங்கள். கண்ணை மூடியவாறே மூக்கின் நூனியைக் கவனியுங்கள்.
மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள்.
இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது.
இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார்.
புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை.
உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை!
அனைத்தும் அறிந்த நிலை.

எதையும் துறக்காமல்
உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல்
நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே
நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய
தினந்தோறும் தியானம் செய்வோம்;.

ஒருவரின் மனம் அமைதியாக இல்லை எனில்
இமய மலைக்குச் சென்றாலும் அமைதியாக இருக்காது.
ஒருவரின் மனம் சந்தையிலும் அமைதியாக இருக்குமாயின்,
பிரக்ஞையாக இருப்பாராயின் அவர் தியான நிலையில் இருக்கின்றார்.
இவருக்கு ஞானம், பேரின்பம் சந்தையிலும் கிடைக்கும்.

சந்தையிலும் அதாவது நம் சாதராரண நாளாந்த வாழ்க்கையிலும் அமைதியாகவும் பிரக்ஞையாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கே ஓசோ நமக்கு வழிகாட்டுகின்றார். ஓவ்வொரு தியான முறைகளும் இந் நிலையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன.

தியான முறைகள்
படகுகள் போல
ஆற்றைக் கடப்பதற்கு மட்டுமே
தியான நிலையை அடைவதற்கான
பேரின்பத்தை அனுபவிப்பதற்கான
ஒரு ஊடகம்.
ஒரு பாதை.

மானுட விடுதலைக்கும் உலக அமைதிக்கும் ஆனந்தமான வாழ்க்கைக்கும்
இவர் வழிகாட்டும் பாதை இது.

உடல் நலம்

உடல் நலம்

                                    அருட்தந்தை


1. அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது. அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.
2. உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

3. வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும்.
உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

4. கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும். விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

5. நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது. ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.
6. நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

7. மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும். பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

8. உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulcer) நோயாக வழங்கப் பெறுகின்றது.

9. உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த் நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

10. எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்

Friday, November 12, 2010

நெருப்பாய் இரு!

நெருப்பாய் இரு!



ஒரே ஒரு முறை
பிறந்த மனிதனே…

அறிவின் எல்லைகள்
விரிந்த புனிதனே…

பிறந்து வந்ததன்
அர்த்தம் தெரியுமா…

நெருப்பைப்போல் உன்னால்
வாழ முடியுமா…

நெருப்பு ஒன்றுதான்
தொட்டதை எல்லாம் நெருப்பாக்கும்…

இன்னும் புதிது புதியதாய் தேடியே
அதையும் வசமாக்கும்…

flame1
























நெருப்பு என்றுமே
மேல்நோக்கித்தான் நடைபோடும்…

தன் பொறுப்பை உணர்ந்துதான்
அனலாய் நடனம் தினம் ஆடும்…
அணைத்தாலும் சோராது ஒருபோதும்…
சிறு காற்று பட்டாலும் உடல் சீறும்…
சுற்றுவட்டாரம் சூடாகும்…
எந்த திசையும் தாண்டியது விளையாடும்…

உனக்குள்ளே சுழலும் வெப்பம்
அது சொல்லும் வாழ்வின் அர்த்தம்…

உன்னை நீ உணர்ந்தால் நித்தம்
உனதாகும் உலகின் மொத்தம்…

நண்பா நண்பா
என்றும் நெருப்பாய் இரு…

எந்த வெற்றிக்குமே நீ
பொறுப்பாய் இரு…

நண்பா நண்பா
என்றும் தீயாய் இரு…

ஊர் போற்றும் என்றால்
அது நீயாய் இரு…

-பிரியன் கவிதை

எண்ணங்கள் பிரம்மாக்கள்

எண்ணங்கள் பிரம்மாக்கள்

எல்லா செயல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மூல விதை எண்ணங்களே. எண்ணங்கள் இல்லாமல் செயல்கள் இல்லை. நிகழ்ச்சிகள் இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் யாரோ ஒருவர் எண்ணத்தில் கருவாகி பின்னால் உருவாகியது தான். ஒவ்வொருவரின் வெற்றிக்கும், தோல்விக்கும் அவரவர் எண்ணங்களே மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இதைப் பெரும்பாலோருக்கு ஏற்க கடினமாக இருக்கலாம். நான் தோல்வி அடைய வேண்டும் என்று எண்ணுவேனா, நான் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவேனா? பின் எதனால் எனக்குத் தோல்வி வந்தது? எதனால் கஷ்டம் வந்தது? என்று கேட்கலாம். கேட்பது நியாயமாகக் கூட நமக்குத் தோன்றலாம். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் தான் உண்மை விளங்கும்.

உதாரணத்திற்கு எனக்குத் தெரிந்த ஒரு மனிதரைச் சொல்லலாம். அவர் வியாபாரத்தில் பெரிய வெற்றியடைய வேண்டும் என்பதே தனக்கு லட்சியம் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். தந்தையின் சொத்தில் ஒரு நல்ல தொகை அவருக்குக் கிடைத்து அதை மூலதனமாகப் போட்டு அவர் வியாபாரம் ஆரம்பித்தார். காலையில் ஏழரை மணிவாக்கில் தான் எழுந்திருப்பார். அரை மணி நேரம் செய்தித்தாள் படிப்பார். பத்து மணிக்குத் தான் கடையைத் திறப்பார். மதியம் ஒன்றரை மணிக்கு வீட்டுக்கு வந்தாரானால் சாப்பிட்டு விட்டுத் தூங்கி எழுந்து மறுபடி ஐந்து மணிக்குத் தான் கடைக்கு செல்வார். எட்டரை மணிக்கு கடையை மூடி விட்டு வீடு திரும்புவார். அவருடைய போட்டியாளர்கள் எல்லாம் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை மதியம் அரை மணி சாப்பாட்டு நேரம் தவிர கடையில் இருந்து வியாபாரம் செய்தார்கள். 

அதைச் சிலர் சுட்டிக்காட்டிய போது அவரோ “மதியம் சற்று தூங்கினால் ஒழிய எனக்கு உடல் ஒத்துக் கொள்கிறதில்லை. அந்த மதிய நேரத்தில் பெரிதாக என்ன வியாபாரம் ஆகி விடப்போகிறது” என்று சொன்னார். எட்டரை மணிக்கு கிளம்பி வருவது ஏன் என்று ஒருவர் கேட்ட போது “ஒன்பது மணி சீரியல் ஒன்று டிவியில் நன்றாக இருக்கிறது. எனவே எட்டரைக்குக் கிளம்பினால் தான் சரியாக அதைப் பார்க்க சரியாக இருக்கிறது” என்றார். வியாபாரத்தில் சிலர் அவருக்கு சற்று மரியாதை குறைவாகக் கொடுப்பது போல் தோன்றினாலும் அவரிடம் வியாபாரம் செய்வதை நிறுத்தி விடுவார். அவர் வியாபாரத்தில் படுநஷ்டம் ஏற்பட்டது என்பதை கூறத் தேவையில்லை.

வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது உண்மையாக இருக்கலாம். ஆனால் மதிய நேரம் மூன்று மணி நேரமாவது தூங்க வேண்டும் என்ற எண்ணமும், இரவு ஒன்பது மணி சீரியலைப் பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணமும், நல்ல மரியாதை தனக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் விட பல மடங்கு வலிமையாக ஆணித்தரமாக அவரிடம் இருந்தன. அந்த பலமான, ஆணித்தரமான எண்ணங்கள் செயல்களாகின. தூங்க முடிந்தது. சீரியல் பார்க்க முடிந்தது. மரியாதை தருபவர்களுடன் மட்டுமே வியாபாரம் செய்ய முடிந்தது. வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தை விட வெற்றிக்கு எதிர்மறையான எண்ணங்கள் வலிமையாக இருந்ததால் வெற்றி மட்டும் கிடைக்கவில்லை. 

எனவே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகம் இருந்தும் எனக்கு வெற்றியே கிடைக்கவில்லை என்று யாராவது சொன்னால் அவர் வெற்றி பற்றிய எண்ணத்தோடு கூட இருக்கும் மற்ற எண்ணங்களையும் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. 

வாய் விட்டுச் சொல்லும் எண்ணங்கள் தான் முக்கியமானது என்றில்லை. பெரும்பாலான நேரங்களில் வாய் விட்டுச் சொல்லாத, வார்த்தையாகாத எண்ணங்கள் நம்முள்ளே வலிமையாக இருக்குமானால் அந்த வலிமையான எண்ணங்கள் தான் செயல்களாகும். மேலே சொன்ன உதாரணத்தில் தோல்வியடைய வேண்டும் என்பது அவரது எண்ணமாயில்லை என்றாலும் தோல்விக்கு இட்டுச் செல்கின்ற எண்ணங்கள் அவரிடம் வலிமையாக இருந்ததால் தோல்வி நிஜமாகியது.

ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது. அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது. அந்த எண்ணம் வலிமையானதாக இருந்தால் அது தனி மனிதர்களை மட்டுமல்ல, ஒரு சமூகத்தையே மாற்றலாம், நாட்டையே மாற்றலாம்.

சூரியன் அஸ்தமிக்காத பேரரசாகத் திகழ்ந்த ஆங்கிலேயர் ஆட்சியை கத்தியின்றி, இரத்தமின்றி போராடி இந்தியாவை விட்டு விரட்ட முடியும் என்ற எண்ணம் மகாத்மா காந்தியிடம் இருந்தது. எண்ண அளவிலே அது நகைப்பிற்கு இடமளிப்பதாகவே தோன்றினாலும் அந்த எண்ணத்தின் வலிமை இந்திய தேசத்தின் சரித்திரத்தையே பின்னாளில் மாற்றியமைத்ததை நாம் அறிவோம். அந்த எண்ணத்தின் வீரியம் எண்ணற்ற மனிதர்களைத் தொட முடிந்ததும், அந்த மனிதர்களை மாற்ற முடிந்ததும், சுதந்திரப் போராட்ட பேரலையை இந்தியாவில் உருவாக்க முடிந்ததும் வரலாறு அல்லவா? ஆங்கிலேய சூரியன் இந்திய மண்ணை விட்டு மறைந்தது சரித்திரம் அல்லவா?

ஒவ்வொரு புரட்சிக்குப் பின்னும், ஒவ்வொரு பெரிய மாற்றத்திற்குப் பின்னும், வலிமை வாய்ந்த எண்ணங்கள் ஆரம்பங்களாக இருந்திருக்கின்றன. வரலாற்றின் மாற்றத்திற்கே விதைகள் எண்ணங்களாக இருக்கின்றன என்றால் தனி மனித மாற்றத்திற்கு எண்ணங்கள் எந்த அளவு முக்கியம் என்பதை சொல்லத் தேவையில்லை.

நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்கிற எண்ணமே அடிக்கடி ஒருவர் மனதில் எழுமானால் அதற்கான ஆயிரம் நிரூபணங்களை அந்த எண்ணம் அவர் வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்கும். என்னால் முடியும் என்ற உறுதியான எண்ணமே எப்போதும் ஒருவர் மனதில் மேலோங்கி நின்றால் அந்த எண்ணம் உண்மையில் அந்தக் காரியத்தை கண்டிப்பாக முடித்துக் காட்டும்.

எண்ணங்கள் பிரம்மாக்கள். அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள். எனவே உங்கள் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எத்தகையவை என்பதை அடிக்கடி சோதித்துப் பாருங்கள். அவை இன்று உங்களை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை. உங்களுடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.

காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்

சுவாமி விவேகானந்தர்: 
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய். 



வில்லியம் ஷேக்ஸ்பியர்:  
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்  
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். 


அடால்ஃப் ஹிட்லர்: 
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. 


ஆலன் ஸ்டிரைக்:  
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள். 


அன்னை தெரசா: 
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.  


பான்னி ப்ளேயர்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
 
லியோ டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. 


அப்ரஹாம் லிங்கன்:
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.  


ஐன்ஸ்டைன்: 
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.  


சார்லஸ்:
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும்.

பொன்மொழிகள்


1.கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.-அப்ரஹாம் லிங்கன்

2.மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை.
- அக்னஸ் றெப்லையர்

3.புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.
- பிலிப் குறொஸ்பி

4.மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம்.
- பேர்ள் எஸ். பக்

5.புறச்சூழல் எம்மை துன்பத்துக்குள்ளாக்குவதாக புலம்புகிறோம். உண்மையில் அது எமது தீர்மானம் மட்டுமே. அதிலிருந்து விடுபடக்கூடிய சக்தி எம்மிடம் உண்டு.
- மார்கஸ் அரேலியஸ்

6.எமது எல்லைகளை தெரிந்துகொண்டவுடன் எம்மில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொள்கிறார்கள்.
- எமர்சன்
உன்னுடைய அனுமதி இன்றி எவரும் உன்னை இழிவு படுத்த முடியாது.
- எலனொர் றூஸ்வெல்ற்

7.எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும். ஒன்று : எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது : செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம்.

என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன?
நான் என்ன செய்ய வேண்டும்?
இவை ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும்.
- நதானியல் பிராண்டன்
8.கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம்என்பதை ஒரு போதும் அறிய முடியாது.
- நெப்போலியன் ஹில்

ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பொன்மொழிகள்


நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.

இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!

அல்லாவின் ஆணை இல்லாமல் எதுவுமே நமக்குக் கிடைக்காது! அவரே நமது பாதுகாவலன்! என் மகனே! அல்லாவிடம் நம்பிக்கைக் கொள்!

கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை உழைப்பிற்கான ஒய்வை! பாதைக்கான ஒளியை!

ஆண்டவனின் கருணை என்றும் முடிவில்லாதது. அது நிரந்தரமானது!

இந்தச் சக்தி உங்களுடைய லட்சியங்களை எட்டுவதற்கும் கனவுகளை நனவாக்குவதற்கும் உதவி செய்யும்.

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது, தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.

தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள்.

வெற்றிக்கும் தோல்விக்கும் இதையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.

காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!

கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.

வெட்டித்தனமாக இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு! அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!

நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உணைமையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.

தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு. தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!

நமது ஆரோக்கியத்திற்கு கஷ்டங்கள் அவசியம் தேவை! நமது உடலுக்குள்ளேயே நல்ல விதமான உணர்வு பூர்வ சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாவிட்டால் வெற்றியடைந்த பிறகு அதை அனுபவித்து மகிழ்ச்சியடைய முடியாமல் போய்விடும். என்பதை நாம் உணர வேண்டும்!

வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.

தேவையான அளவிற்கு சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் அதிகாரமும் உடைய ஒரு தலைவரால்தான் தமது அணியை வழிநடத்திச் செல்லும் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இயலும்.

வேலைநாட்களில் அன்றாட கூச்சல், குழப்பம் சந்தடியெல்லாம் அடங்கியதும் ஆற, அமர சிந்தித்து அடுத்து வரப்போகும் புத்தம் புது நாளை எதிர்கொள்வதற்கு உன்னை நீ செம்மையாகத் தயார் செய்து கொண்டால் எதிர்காலத்தில் நீ வெற்றிகரமான தலைவர்தான்!

எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவர்ம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்!

கால எல்லையைத் தவிர வேறு எந்த வித்த்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.

சுயசிந்தனை ஆற்றலும் தன்னம்பிக்கையும், தன்னைத்தானே அறிந்துக் கொள்ளும் திறனும், நிறைந்த மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தை எந்த தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க முடியாது.

ஒருபக்கம் இருநூறு முன்னூறு ஹீரோக்கள்; மறுபக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நாறு கோடி மக்கள்! இது மாற்றப்படவேண்டிய நிலவரம்.

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்!

பாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்!!

பாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்!!



பரந்து விரிந்த பூமியின் அகண்ட பெரும்பள்ளங்களை மேவிக்கிடக்கின்ற இந்நீலக்கடல் அள்ளிவந்து எறிந்துபோகும் அலைகளை கால்கட்டி ரசித்தவனாயிருக்கிறேன்.
பகலெல்லாம் வெம்மை பரவி ஆறிக்கொண்டிருக்கும் சாளரத்தின் வழியே ஊடுருவும் பார்வைகளில் சூரியப்பெருநட்சத்திரத்தின் பரிமாணத்தை அளந்தவனாயிருக்கிறேன்.
மலையுச்சியிலிருந்து பெரும் ஓலமிட்டுத் தாழவீழ்ந்து அடர்வனத்தினூடே நெளியும் நதியொன்றின் தீர்க்கத்தை வியந்தவனாயிருக்கிறேன்.
அனைத்துமே சோர்தலின்றிச் சுற்றுதல்கொண்டு செம்மைப்பட வாழ்தலின் அத்தியாவசியமொன்றை உரக்க உரைத்தபடியேயிருக்கிறது.
காலத்தின் நகர்தலுடன் தன்னைப் பிணைத்துக்கொண்ட எந்தவொரு துகளிலும் வாழும்கலையின் சூத்திரம் தன்னிறைந்திருக்கிறது.
என் சிறுகுடிலின் வாசலோரம் அதிகாலை மொட்டவிழ்ந்த வாசமலர்கள் அனைத்தும் வண்ணத்துப்பூச்சிகளின் வருகையை யாசிக்கின்றன.
இயற்கையின் தந்திரம் தனைச்சூழக்கட்டிய கூட்டினுள் விதியென அடங்கிப்போகாது,
முட்டிமோதியுடைத்து வரும் பட்டாம்பூச்சிகளோ தன் வலிகளின் பிரசவங்களை வண்ணங்களாய்ப் போர்த்தி தோட்டப்பூக்கள் முதல் காட்டுப்பூக்கள் வரை அனைத்தையும் கர்வத்துடனே நுகர்ந்து போகின்றன.
முட்டவரும் காளையை திமில் பிடித்தடக்கி அதிலேறி ஏழுகடல் தாண்டி பயணிக்கும் சூத்திர வித்தை அறிந்திருக்கின்றன அவை.
தன்னுயிர்க்காய்த் தாவியோடும் மான்குட்டிகளின் வேகத்திற்கும் சிங்கத்தின் அகோர பசிக்குமான போட்டிகள் ஒவ்வொரு வனாந்திரத்தின் திசைகளெங்கிலும் அரங்கேறியபடிதானிருக்கின்றன.
பாய்ந்து மறையும் ஒவ்வொரு மான்குட்டியிடமும் தோற்றுக்கொண்டேயிருக்கிறது சிங்கத்தின் பசி.
நீர்சூழ பிரசவிக்கப்படும் ஒவ்வொரு மீன்குஞ்சும் அதனுலகில் உயிர்வாழ்தலின் அதிகபட்ச தேவைகளின் தீர்க்கங்களோடே பிறக்கின்றன.
அறிவின் உயர்நிலைப் பரிணாமமாய்ப் பிறவிகொண்ட மனிதனின் ஒவ்வொரு தொடக்கப்புள்ளியும் வெகு ஆதியில் கோடிகளின் முதலொன்றாய்த் அண்டம் துளைத்து உருப்பெற்றவையே.
காலச்சக்கரத்தின் ஓட்டத்தின் பின்னால் வசந்தத்தை நழுவவிடும் ஒவ்வொரு தோட்டமும் பிரிவுதாளாது இலையுதிர்க்கக்கூடும்.
அதன்பின்னொரு குளிர்காலத்தில் மரங்கள் உலர்ந்துபோயிடினும், பெரும்பாலையொன்றில் உலாவும் ஒட்டகத்தின் தொண்டைக்குழி நீரொத்ததொரு பசுமை அதன் அடிமனங்களின் வசந்தத்தின் வருகைக்காய் முனைப்புகளுடன் காத்திருக்கும்.
மீண்டும் மலரும் பெருமண நாளொன்றின் காலடிச்சப்தம் கேட்ட கணத்தில் வீரியங்கொண்ட அப்பசுமையின் ஆண்மை பலவாறாய் முனைந்தெழும்.
வெற்றிக்கனிகள் விளைந்துகிடக்கின்ற மலைதேச அடர்வனத்தைத் தேடிச்செல்லும் சாலையொன்றிலான பயணப்பொழுதில் தன் சார்ந்த நம்பிக்கையின் கரங்கள் சிறகுகளாய் உருப்பெறுகின்றன.
அவை வெற்றியின் புகலிடம் அடைதலின் அதிகபட்ச சாத்தியத்தினூடே வானம் அளக்கின்றன.
முயற்சிகள் சரியான தீர்வுகள் நோக்கியிருக்கும் பொழுதுகளில் தோல்விக்கு தலைதூக்கும் திராணி
சற்றுமில்லை.
முயல்-ஆமை கதைகொண்டும் சொல்லப்பட்டது முயலின் தோல்வியைக்காட்டிலும் முயலாமையின் தோல்வியென்பதை மறுப்பார் யாருமுண்டோ?.
ஆயிரமாயிரம் மைல்கள் சோர்வின்றிப் பறக்கின்ற தேனீக்களே வாழ்வில் இனிமை சேகரிக்கின்றன.
களங்கள் தோறும் சூடிக்கொள்ளும் தோள்களுக்காய்க் காத்திருக்கின்ற வெற்றிகளை தமதாக்கிக்கொள்வதிலேயே இருக்கிறது வாழ்க்கையின் முழுமை.
இறக்கைகளில் வீரியமேந்தி கடல்தாண்டி பயணிக்கும் எந்தவொரு பறவைக்கும் அக்கரையில் சரணாலயமொன்று குளிர்மையின் திரட்சிகள் போர்த்தி வரவேற்பின்பொருட்டு காத்திருக்கிறது.
சேயைச் சூழ்ந்த தாயின் கரங்களொத்து பூமி வேய்ந்த பெருவானத்தின் கீழும், நகரும் காலத்தினை பரைசாற்றி ஊர்ந்துகொண்டிருக்கும் இப்பூமியின் மேலும் வீணென்று எதுதான் படைப்புப் பெற்றிருக்கிறது.
உருப்பெற்ற, உயிர்பெற்ற இப்பேரண்டத்தின் ஒவ்வொரு கூறும் வெற்றிச் சரித்திரமொன்றை தன்னில் தாங்கியே பயணத்திருக்கின்றன.
எல்லா அறிதல்களுடன் காலத்தின் இயக்கத்தை தன்னளவின் முழுமையுடனும் மிகுந்த ரசனைகளுடனும் பார்த்தபடியே வந்திருக்கிறது இயற்கை.
இரண்டாம் உலகப்போரில் அணுநாசங்கண்டு சிதறுண்ட ஜப்பானும், முந்தைய காலத்தில் கைபற்ற எவருமில்லாக் குழந்தைபோலிருந்த சிங்கை, மலேசியாவும் இன்று நம்பிக்கையின் வெற்றிகண்டுதான் தலைநிமிர்கின்றன.
ஒருவனை அதி உயரத்தில் உயர்த்திப்பிடிக்கும்
எந்தவொரு வெற்றியும்
தோல்வியின் உருக்கொண்டே
அவனிடம் வருகிறது.

வெட்டப்பட்ட மரமே வெகுண்டு விளையும்!
பாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்!!


வாழ்வின் வெற்றி - தன்னம்பிக்கை முனை

வாழ்வின் வெற்றி - தன்னம்பிக்கை முனை



ஒருவரது வாழ்வின் வெற்றி என்பது அவரது வாழ்க்கைப் படிநிலை தொடர்ந்து ஏற்றப்பாதையில் செல்கிறதா என்பதைப் பொறுத்தது. 

ஏற்ற இறக்கமான வாழ்க்கை என்பது சராசரி வாழ்க்கை. 

தொடர்ந்து இறக்க நிலையில் இருக்கும் ஒரு வாழ்க்கை என்பது தோல்வியின் அடையாளம்.

தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி என்பது தோல்வியுற்றவர்களுக்கான உற்சாக வார்த்தை. ஆனால் என்றும் முதல் படியிலேயே நின்று கொண்டிருப் பவர்களை என்ன சொல்வது? இரண்டாவது படிக்கு செல்வதற்கான முயற்சி என்பது மிகவும் அவசியம். ஒரு சின்ன வெற்றி. அது போதும். 

எடுத்த எடுப்பிலேயே மாபெரும் வெற்றி என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். ஆனால் அதைத் தொடர்ந்து வருவது ஒரு சின்னத் தோல்வியாக இருந்தால் கூட சில நேரங்களில் அதைத் தாங்க முடியாது போகலாம். முதல் படியில் இருந்து விழும்போது பெரிதாக அடிபடாது. ஆனால் உச்சிப் படியில் இருந்து விழும்போது அந்த வீழ்ச்சி மிகப் பெரியதாக இருக்கும். 

ஒவ்வொரு படியிலும் பிடிமானம் மிக முக்கியம். ஒவ்வொரு படியாக மேலேறிச் செல்பவருக்கு அந்தப் பிடிமானம் வலுவாக இருக்கும். ஒரேயடியாக மேல்படிக்கு தாவிச் செல்பவருக்கு பிடிமானமே இருக்காது.

கிடைக்கும் வெற்றி தனக்குத் தகுதியானது தானா என்ற கேள்வி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்க வேண்டும். தகுதியான வெற்றி ஒரு போதும் தன்னைவிட்டு நீங்காது. தகுதியற்ற வெற்றியோ நிலையற்றது.

பரீட்சையில் காப்பியடித்து வெற்றி பெறுபவன் தற்காலிகமாக வெற்றி பெறலாம். அவன் அதையே தொடர்ந்து தேர்வில் வெற்றி பெற உபயோகித்தால் ஒருநாள் கண்காணிப்பாளரால் பிடிக்கப் படுவான். அன்றோடு அவன் வாழ்க்கை முடிந்தது.

போலியான சான்றிதழ்களைக் கொடுத்து பலர் வேலை வாய்ப்புகளைப் பெற்றனர். ஒருநாள் அவர்களின் சான்றிதழ்கள் பொய்யானவை என்று கண்டறியப் பட்டது. அதுவரை அவர்கள் செய்து வந்த பணி அவர்களிடமிருந்து உடனடியாக பறிக்கப் பட்டது. அந்த வேலையை நம்பி அவர்கள் வாழ்க்கையில் கட்டியிருந்த கனவுக் கோட்டைகள் அனைத்தும் ஒரே நாளில் சரிந்து விட்டன. அவர்களை நம்பியிருந்த அவர்களின் குடும்பத்தினர் ஏமாற்றமும் அவமானமும் அடைந்தனர். நேர்மையற்ற வெற்றிகள் ஒருபோதும் நிலைக்க மாட்டாது.

நேர்மைக்கு அடுத்தபடியாக நேரந்தவறாமை மிக முக்கியம். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிக முக்கியம். அதை கொடுத்த காலக்கெடுவுக்குள் முடிப்பதும் அவசியம். அடுத்தவர் நமக்கு கெடு விதிக்குமுன்பே நமக்கு நாமே கெடு விதித்துக் கொள்ள வேண்டும். அந்தக் கெடுவிற்குள் குறித்த செயலை முடிப்பேன் என்று உறுதி கொள்ள வேண்டும். உண்மையில் அடுத்தவர் 10 நாட்களில் ஒரு செயலை முடிக்க கெடு வைத்தால் நமக்கு நாமே வைக்கும் கெடு 7 அல்லது 8 நாட்களாக இருக்கலாம். அப்படி நமது கெடுவிற்குள் காரியத்தை முடித்து விட்டால் மிச்சப்படும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நமக்கு நிம்மதியாக இருக்கும். அல்லது முன்கூட்டியே முடித்ததற்கான பாராட்டு கிடைக்கும். இதற்கு மாறாக பத்து நாளில் முடிக்க வேண்டிய வேலையை 12 நாட்களோ 15 நாட்களோ நீட்டினால் மேலதிகாரி, அல்லது வாடிக்கையாளரிடமிருந்து வரும் மோசமான விமர்சனங்களை தாங்கிக் கொள்ள வேண்டும். அது மேலும் மனதை தளர்ச்சியுறச் செய்யும். அதுவரை உழைத்த உழைப்பும் அதில் கிடைத்த வெற்றியும் தாமதம் என்ற ஒரே காரணத்தினால் அங்கீகரிக்கப் படாமல் போகலாம்.

பள்ளியில் தாமதமாக வரும் மாணவனோ, மாணவியோ பாடங்களை ஒழுங்காக படிக்க முடியாது. பல பாடங்கள் அவர்களின் நோட்டுப் புத்தகங்களில் வெற்றிடமாக இருக்கும். கடைசியில் தேர்வுத் தாளிலும் பல கேள்விகள் விடையற்றதாக இருக்கும்.

பணிக்குத் தாமதமாக வரும் பணியாளரின் பணிக்குறிப்பேட்டில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கும். அவரது பதவி உயர்வுகள் பல ஆண்டுகள் தாமதமாகலாம். அவருக்குக் கீழேயுள்ள பலர் அவரைக் கடந்து மேலே செல்லலாம்.

அடுத்தது வாக்குத் தவறாமை. அடுத்தவருக்கு ஒரு வாக்குறுதி கொடுக்குமுன் நன்றாக யோசித்துத் தான் கொடுக்க வேண்டும். அரசியல் வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் இந்த வகையில் சேராது. அவர்கள் மக்களின் மறதியை நம்பி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கு கின்றனர். மக்களும் அதை நம்பி ஓட்டுப் போட்டு விடுகின்றனர். வாக்குறுதி கொடுத்த அரசியல்வாதியோ அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பதவி சுகத்தை அனுபவித்து விட்டு அடுத்த தேர்தலின் போது மட்டுமே மீண்டும் தலைகாட்டுகிறார். மீண்டும் அதே பழைய வாக்குறுதியை புதிய வாக்குறுதியாக மீண்டும் அளிக்கிறார். இவர்களும் மறுபடி வாக்குகளை வழங்குகின்றனர். இந்த வாக்குறுதிகளில் எந்த உண்மையும் இல்லை. 

ஆனால் தனிநபர்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளில் கவனம் தேவை. உதாரணமாக ஒருவர் கடன் கேட்கிறார். இப்போது என்னிடம் இல்லை. நாளை வா தருகிறேன். என்கிறோம். மறுநாள் அவர் அதை நம்பி வந்து நிற்பார். முந்தின நாள் சொன்னது மறந்திருக்கலாம். அல்லது முந்தினநாள் சும்மா தப்பிப்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கலாம். என்றாலும் இப்போது மீண்டும் ஒருமுறை முந்திய வாக்குறுதிக்காக சமாளிக்க வேண்டியிருக்கிறது. அந்த வாக்குறுதியை ரத்து செய்யும் விதமாக என்னிம் பணமே இல்லை. இதற்காக நீங்கள் மறுபடி என்னிடம் வர வேண்டாம். என்று உறுதியாக சொல்லி விடலாம். அப்போது அவர் நம்மை நம்பியிராமல் வேறொருவரை நாடிச் செல்வார். அதற்குப் பதிலாக தொடர்ந்து நாளைவா, மறுநாள் வா என்று அலைக்கழிப்பது அவரை உங்கள் வாக்குறுதியை நம்பி ஏமாறச் செய்யும்.

ஒருவர் தன்மகளின் திருமணச் செலவுக்கு வைத்திருந்த பணத்தை நண்பரின் மனைவி நோய்வாய்ப்பட்டிருந்த போது அவசர மருத்துவச் செலவுக்காக தந்தார். நண்பரும் அலுவலக பிஎப் சேமிப்பிலிருந்து கடன் பெற்று திருப்பித் தருவதாக வாக்களித்தார். இவருக்கு மகளின் திருமணத் தேதி நெருங்க ஆரம்பித்தது. நண்பரிடம் கேட்டபோது பிஎப் கடனுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். வந்தவுடன் தந்து விடுவேன் என்றார். ஆனால் நண்பரோ அந்தப் பணம் வந்தவுடன் இவருக்குத் தராமல் வேறு காரியத்துக்கு பயன்படுத்திக் கொண்டார். இதனால் இவருடைய மகளின் திருமணமே நின்று போனது. நண்பரின் வாக்குறுதியை நம்பி அவரது அவசரத்துக்கு உதவியதால் இவர் அவமானப் பட வேண்டியதாயிற்று.

ஒரு கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர் வீட்டு உரிமையாளரிடம் இன்னும் இருபது நாட்களுக்குள் வீட்டை முடித்து கையில் தருகிறோம். என்று சொல்கிறார் வீட்டு உரிமையாளரும் அதை நம்பி கிரகப் பிரவேசத்துக்கு நாள் குறிக்கிறார். நண்பர்கள் உறவினரையும் அழைக்கிறார். ஆனால் கட்டிட பொறியாளர் குறிப்பிட்ட நாளில் வேலையை முடிக்க வில்லை. அதனால் கிரகப் பிரவேசத்தை மாற்ற வேண்டியதாயிற்று. காரணம் கேட்ட உறவினர்கள், நண்பர்களிடம் எல்லாம் பொறியாளர் வாக்குறுதியை நிறைவேற்றாததை வீட்டு உரிமையாளர் சொல்கிறார். இதனால் அந்த பொறியாளருக்கு தங்கள் வீட்டின் கட்டுமானப் பணிகளை தர எண்ணியிருந்த பலர் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்கின்றனர். எனவே நிறைவேற்ற இயலாத வாக்குறுதி ஒன்றினால் அந்தப் பொறியாளர் பல வாடிக்கையாளர்களை இழக்கிறார்.

இந்த நிலைகளை ஒருவர் கடந்து விட்டாலே மேல் நோக்கிய வாழ்க்கைப் படிகளில் ஏறத் தொடங்கி விட்டார் என்று பொருள்.

வெற்றிக்கான விளக்கம்

VICTORY- வெற்றிக்கான விளக்கம்!

V-VISION
அதாவது நாம் என்னவாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அந்த நிலையில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும்.இப்படி தினந்தோறும், நாம் அதைச் செய்யும் போது நமக்குள்ளே தன்னம்பிக்கை வளரும்.
I-INVOLVEMENT
அந்த நிலையை அடைய நாம் தீவிரமாக உழைக்க வேண்டும். அதற்கு நம்முடைய ஆர்வமும், ஊக்கமும் அவசியம்.
C-CONFIDENCE
இடையிடையே எவ்வளவு தடைகள் வந்தாலும், நாம் மனம் தளராமல் இருத்தல் அவசியம். சற்று மனம் தளர்ந்தாலும் அது தோல்வி தான்.
T-TROUBLESHOOTING
ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை வந்தால் ‘ஐயோ பிரச்சினை வந்துவிட்டதே’ என்று எண்ணிக் கொண்டு இருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் பிரச்சினைதான் பெரிதாகும். அதை விடுத்து தீர்வைப் பற்றி சிந்திக்க வேண்டும். செய்ய ஆரம்பித்தால் பிரச்சினை சிறியதாகி விடும். பின்பு முழுமையாக தீர்ந்தே போகும்.
O- OPTIMISTIC THOUGHTS
இது ஒவ்வொரு நேரத்திலும் நம்மோடு இருக்க வேண்டும். ‘ நம்மால் முடியும், நாம் செய்வோம்’ என்ற எண்ணங்கள் நம் மனதில் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.
R-REVISING
Error is Human, Forgive is Divine என்று சொல்வார்கள். மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான். நம் முயற்சியில் சிறு சிறு தவறுகள் நேர்ந்து விட்டால், அதை பெரிதாக்காமல், தவிர்த்து அடுத்த முறை மீண்டும் அப்பிழை நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Y- YA YOU HAVE WON IT!
இத்தனையும் தொடர்ந்து செய்து கொண்டு வந்தால், நிச்சயம் நாம் வெற்றி என்னும் கோபுரத்தில் நின்று கொண்டிருப்பதை உணரலாம். எந்த ஒரு வேலையையும், சிறிய வேலையாக பிரித்துக் கொண்டு, ஒவ்வொன்றாக செய்து முடிக்கும் போது, இறுதியில் அந்த பெரிய வேலை செய்து முடிக்கப்பட்டிருக்கும் என்பது உறுதி.






















தன்னம்பிக்கை டானிக்

தன்னம்பிக்கை டானிக்


நட்சத்திரக் கூட்டங்களுக்கு குறி வையுங்கள். அப்போது தான் வானின் உச்சியையாவது நிச்சயம் தொட முடியும்.


”பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்”….துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்…உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. – ரூதர்போர்டு.

Don’t be Ever Rest.
Be an Everest.


தோல்வியை எருவாக்கு;
வெற்றியை உருவாக்கு.


சுற்றவே பிறந்தது பூமி
சுடரவே பிறந்தது கதிர்
உலவப் பிறந்தது காற்று
உழைக்கப் பிறந்தவன் நீ.

When you Rest, You Rust.


வீசும் காற்றும் எழும் அலையும் எப்போதும் மிகத் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும்.


வீரியத்தோடு விடாது முயற்சி செய்! தயங்கிப் பின் வாங்காதே! தளர்ந்து தடம் புரண்டு விடாதே! தொடர்ந்து செய்! துணிந்து செய்! ஊக்கத்தோடு பாடுபடு! உறுதியோடு பாடுபடு! அப்போது காலங்கனிந்து கைகூடி வரும். வெற்றி தேவதை உன்னை வாழ்த்தி வரவேற்பாள்!


விழாமையன்று நம் பெருமை…விழுந்தொரும் எழுவதே!

சுறுசுறுப்பாயிருங்கள்…ஓடிக் கொண்டிருக்கும் நீரில் தான் ஆக்சிஜன் அதிகம்.


தீப்பொறியாக ஒரு கணம் இருந்து விட்டு மறைந்து விடுங்கள்.காலமெல்லாம் புகைந்து கொண்டிருப்பதை விட…


தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல;
தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.


மறந்து விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உங்கள் சரித்திரத்தில் ஒவ்வொரு பக்கமாகும்..


மனச இரும்பாக்கனும்; மலய துரும்பாக்கனும்.

Even the word Impossible says I’m Possible.


பறந்து செல்லுங்கள். உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். நேரத்தைத் தவிர…- நெப்போலியன்.


If you want to be Remembered do one thing superbly well.


கல்லும் சிலையும்

கல்லும் சிலையும்


நடமாட்டம் குறைந்த
மாபெரும் நகரின் கடைத்தெரு!
வருவோர் போவார் எல்லோர்க்கும்
இடைஞ்சலாய் கிடந்தது ஒரு பாறாங்கல்!
யாராவது இக்கல்லை எடுத்துப் போக மாட்டார்களா
என்பதே கடைக்காரர் விருப்பம் - அவர்
விருப்பம் நிறைவேற்றிடவே வந்தார்
வழிப்போக்கர் ஒருவர் கடையருகில்!
“ஐயா! இக்கல்லை எனக்குக் கொடுத்து உதவுகிறீரா?”
வழிப்போக்கர் வினவினார் கடைக்காரரிடம்.
மனமகிழ்வுடன் தலையசைத்தார் கடைக்காரர்
விருப்பம் நிறைவேறுதலை யார்தான் மறுப்பார்?
தெருவில் கிடந்த பாறாங்கல்லைத்
தொட்டு வணங்கி எடுத்துப்போனார் வழிப்போக்கர்.
ஆறுமாதம் தவமும் உழைப்பும் தொடர்ந்தது.
அழகிய சிலை ஒன்று உருவானது!
அற்புத அழகுடன் சிலை வடித்த
அந்த வழிப்போக்கர் - சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ!
மனதில் நினைத்தாலே கரம் குவியும் - அம்
மகானின் சிலை வடிவம் - இயேசு பெருமான்!
இயேசு பெருமான் சிலை காட்சிக்கு வந்தது
இதயத்துடிப்புடன் போட்டி நடந்தது - சிலை வாங்கிட!
இறுதியில் கடைக்காரர் வென்றார் - அதிக விலையை
ஈந்து இயேசு பெருமான் சிலையை வாங்கினார்!
சிற்பி மைக்கேல் ஏஞ்சலோவிடம் கடைக்காரர்
சிரம் தாழ்ந்து கேட்டார் - இச்சிலை
வடிக்க மூலக்கல் எங்கேயிருந்தது பெற்றீர்?
வணங்கிச் சொன்னார் சிற்பி நடந்தவற்றை!
கடைக்காரர் பார்வையில் பாறாங்கல் - தடைக்கல்
சிற்பியின் பார்வையில் பாறாங்கல் - சிலை!
மூலப்பொருள் ஒன்றுதான்; பார்வைதான் வேறு
முக்கியம் இங்கே மனதின் பார்வைதான்!
பார்வை மாறினால் பாதை தெரியும்
பாதை தெரிந்தால் பரிசுகள் குவியும்;
அகமாற்றம் அற்புதம் விளைவிக்கும் - கல்லும்
அற்புதச் சிலையாகும் அல்லவா?
புற மாற்றம் தற்காலிகம் - என்றும்
அக மாற்றமே நிரந்தரம்! - கல்லும்
சிலையாகும் - இதனால் பொன்னும் பொருளும்
சிறப்பும் மகிழ்வும் சேர்ந்தேவரும் - உண்மை.

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்தி;லும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி திருவினையாக்கும்!

 

‘நாம் எந்த ஒரு விஷயத்தையும் செயல்படுத்த முயற்சி செய்தால் மட்டுமே அது நம்மால் இயலுமா, இயலாதா என்பது நமக்கே தெரியவரும்.’

இயலாமை என்று ஒன்றும் இல்லை.

பள்ளிப் பயிலும் சிறுவனுக்கு இரு சக்கர சைக்கிள் ஓட்டுவது மலைப்பாகத்தான் தோன்றுகிறது.

ஆனால் தந்தையின் உதவியுடன் தட்டுத் தடுமாறி பயிலும்போது பலமுறை விழுந்து, சிறாய்ப்புக் காயங்களுக்கு ஆளாகி நாளடைவில் சில்லென்று காற்று முகத்தில் வீச தன்னுடைய நண்பர்கள் முன்னிலையில் ஹாண்டில்பாரிலிருந்த கைகளையும் எடுத்துவிட்டு ஜாலவித்தைக் காட்டுகையில் மனதில் தோன்றும் மகிழ்ச்சி! 

அதற்கு ஈடு இணை உண்டா என்ன?

அதை செயல்படுத்த அச்சிறுவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் சந்திக்க வேண்டிய தோல்விகளையும் வேதனைகளையும் முன்கூட்டியே சிந்தித்துப் பார்த்திருந்தால் அவனால் அதில் இறங்கியிருக்க முடிந்திருக்குமா என்பது சந்தேகமே..

ஆனால் நம்முடைய வயதும் படிப்பும் அளித்திருக்கும் இந்த  அனுபவம் சில சமயங்களில் நம்மால் எந்த ஒரு விஷயத்திலும் இறங்குவதற்கு முன்பு அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்து அதில் நம்மை இறங்கவிடாமலே செய்துவிடுகிறது.

எழுந்து நடந்தால் விழுந்துவிடுவேன் என்று பத்து மாத பாலகனுக்கு தெரியாததால்தானே பல முறை விழுந்தும் எழுந்து நடப்பதில் குறியாயிருக்கிறது?

அதுபோன்ற மனநிலையுடன்தான் நாமும் ஒவ்வொரு விஷயத்திலும் இறங்குகையில் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தை செயல்படுத்த முனைகையில் அது நம்மால் முடியுமா, முடியாதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வதில் தவறில்லைதான்.

ஆனால் முடியாது என்று நம்முடைய உள்ளுணர்வு கூறுமானால் அதை உடனே ஏற்றுக்கொண்டு நம்மால் முடியாது என்ற முடிவுக்கு வரலாகாது.

ஏன் முடியாது என்ற எதிர்கேள்வியையும் நம்மை நாமே கேட்டு அதற்கு நம்முடைய பகுத்தறிவு கூறும் காரணங்கள் என்னென்ன என்பதை அமர்ந்து ஆராய்ந்து அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்பதைக் கண்டுணரவேண்டும்.

அப்போதுதான் நம்முடைய முயற்சி வெற்றியைத் தரும்..

சரி.. அப்படியே நம்முடைய முயற்சி தோல்வியில் முடிந்தாலும் சோர்வடையாமல் மீண்டும் அமர்ந்து நம்முடைய முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது என்பதை அலசி ஆராய தயக்கம் காட்டக்கூடாது.

இன்றைய தோல்வியில் நாளைய வெற்றி உதயமாகலாம் அல்லவா?

தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்.

தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்.

 
1-உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
2. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
3. உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
4. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
5. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
6. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரயம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
7. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
8. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
9. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
10. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
11. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
12. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
13. மன்னிக்கப் பழகுங்கள்..
14. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
15. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
16. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
17. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
18. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டேஇருங்கள்.
19. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
20. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

WHO I AM ?

யாரென்று தெரியாது - நீ...
இணையதளம் இணைத்த இணைப்பு...
மன்னிக்கவும்...
இனிப்பு...
உனக்க ும் எனக்கும் ஒரு வித்யாசம்...
நிஜங்கள் எனக்கு கை கொடுப்பதில்லை...
கனவுகள் உனக்கு கை கொடுப்பதில்லை...
இருந்தும்,
நம்பிக்கையின் பாதையில்,
ஊர்ந்து கொண்டிருக்கிறோம்...
வெற்றி தொலைவல்ல நண்பனே...
சில உறவுகளுக்கு அர்த்தங்கள் இல்லை...
நீ இல்லையேல், வாழ்வில் அர்த்தம் இல்லை...
இந்த வார்த்தைகள்,
நேரம் தாழ்ந்தாலும்,
நேசம் தாழாது...
என் வெற்றியில் உன் பங்கிருக்கும்...
உன் வெற்றியில்,
நிச்சயம் என் பங்கிருக்கும்...
நேரில் பார்க்காவிட்டாலும்...
நேரம் கிறுக்கி விட்டது..
நம் நட்பை...
கிறுக்களும் காவியமாகிவிட்டது...
இது அதிசயம்...
என்றும் உன் அருகில் இருப்பேனா என்பது எனக்கு தெரியாது..
ஆனால்...
ஓடி..கலைத்து வா...
நட்பென்னும் நிழலை கொண்டு நான் நின்றிருப்பேன்...
நண்பா...
உனக்காக...

by A.C.KANNAN YADAV, ADVOCATE

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்

கனவுகள் நினைவாக... நினைத்தவை எல்லாம் நிஜமாக.... கண்ணுக்குள் கண்ட கனவு கண் முன் நடக்க ஒரு சில யோசனைகள்.

ஒரு சிலர் எவ்வளவோ பேரும் புகழும் பெறுகின்றனர். அவர்களது பணியில் சிறந்து விளங்குகின்றனர். எட்டாத புகழை அடைகின்றனர். இதெல்லாம் அவர்களால் எப்படி முடிந்தது. இதோ அந்த வெற்றியின் ரகசியம்.

நமது வாழ்க்கை எப்போதுமே ஒரு ஓட்டப்பந்தய மைதானம்தான். அதில் மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருப்போம் நாம். வேகமாக ஓடுபவன் புகழை அடைகிறான். ஆனால் நாமோ எந்த லட்சியமும் இன்றி ஓடிக் கொண்டிருப்போம். மற்றவன் அடையும் புகழைக் கண்டு பொறாமைப் பட்டுக் கொண்டும் ஓடிக் கொண்டிருப்போம்.

தடுக்கி விழுந்தவனைப் பார்த்து ஏளனச்சிரிப்புடனே ஓடிக் கொண்டிருப்போம். ஓர் கட்டத்தில் நம்மால் ஓட முடியாமல் நிற்போம். அதுதான் வயோதிகம். அப்போதும் நம்மைக் கடந்து பலர் ஓடிக் கொண்டிருப்பார். இது வேண்டாமே....

வேகமாக ஓடி புகழை அடைய வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஓடலாமா?

அதற்காக 10 எளிய வழிகள். இவைகள் அனைத்தும் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கனவுகள் நிஜமாக கையாண்ட முறைகள்தான்.

தன்னம்பிக்கை

10 வழிமுறைகளில் எத்தனை வழிகளை நீங்கள் கையாள முடியும் என்று நினைக்கின்றீர்கள்?

அனைத்துமா? ஆம் இதுதான் முதல் வழிமுறை. வெற்றி பெற தன்னம்பிக்கை தேவை. அனைத்தையும் செய்ய இயலும் என்ற தன்னம்பிக்கை. நம்பிக்கையற்றவர்களையும், அவநம்பிக்கையையும் தவிருங்கள். வெற்றி உங்கள் பக்கத்தில் வரும்.

லட்சியம்

உங்களது லட்சியத்தை அல்லது நீங்கள் அடைய விரும்பும் ஒன்றை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டுமெனில் அது என்ன என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 

முயற்சி

நீங்கள் என்னவாக விரும்பினீர்களோ அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். எதை நினைத்தும், பயந்தும் முயற்சியில் இருந்து பின்வாங்காதீர்கள். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.

கற்றுக்கொள்ளுங்கள்

படியுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் எதையாவது கற்றுக் கொண்டே இருங்கள். புதிது புதிதாக எதையாவது அறிந்து கொண்டே இருங்கள். உங்களுக்கு எதில் விருப்பமோ அதைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள முன்வாருங்கள். கற்றுக் கொள்வதை எப்போதும் நிறுத்த வேண்டாம்.

உழைப்பு

லட்சியத்தை நோக்கி கடுமையாக உழையுங்கள். உங்கள் பார்வை எப்போதும் லட்சியத்தை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். லட்சியத்தை பார்க்கும் கண்களுக்கு அதன் வழியில் இருக்கும் தடைகள் தெரியாது. அப்போதுதான் உங்கள் உழைப்பு பலனை அளிக்கும். 

தெளிவுறுங்கள்

லட்சியம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளங்கள். நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். தவறுகள் மூலமாகவும் பலவற்றை கற்றுக் கொள்ளலாம். தவறுக்காக எப்போதும் கவலைப்படாதீர்கள். உங்கள் தவறுகள்தான் பல சமயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

குறுக்கீடு

உங்கள் லட்சியத்தை கெடுக்கும் வகையில் நபரோ அல்லது பொருளோ, பணமோ குறுக்கே வருவதை அனுமதிக்காதீர்கள். உங்களது அனைத்து எண்ணங்களையும் லட்சியத்தை நோக்கியே செலுத்துங்கள். உங்கள் நேரத்தை அதற்காகவே செலவிடுங்கள்.

தனித்துவம்

உண்மையாக இருங்கள். உங்களை நம்புங்கள். சுயமாக சிந்தித்து சொந்த திறமையை வெளிப்படுத்துங்கள். மற்றவர்களை பின்பற்றி சென்றால் தனித்துவம் இருக்காது.

கலந்தாய்வு

எந்த மனிதனும் தனியல்ல. எங்கும் எப்போதும் ஒரு குழுவாகவே இருக்க வேண்டும். உங்களது எண்ணங்களை, சிந்தனைகளை மற்றவர்களுடன் கலந்து பேசுங்கள். அவர்களையும் பேசச் சொல்லுங்கள். மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள். பயிற்சி, ஊக்கம் போன்றவற்றை ஒருசேரப் பெருங்கள்.

பொறுப்பேற்பு

எப்போதும் யாரையும் ஏமாற்றாதீர்கள். யாரிடமும் பொய் சொல்லாதீர்கள். உறுதி அளித்தால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள். தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.

நேர்மை, கீழ்பணிதல், பொறுப்புடன் செயலாற்றுதல் போன்றவை இல்லாமல் எந்த காரியத்தையும் சாதிக்க இயலாது.

எனவே இவற்றை கடைபிடித்து உங்களது லட்சியத்தை நிறைவேற்றுங்கள். நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் வாழ்ந்ததற்கான சுவடுகளை ஏற்படுத்திவிட்டுச் செல்லுங்கள்.

கீதையில் மனித மனம்

கீதையில் மனித மனம்

கீதையில் மனித மனம் 'கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்' நூலிலிருந்து அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.மனிதனின் மனதைப் பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.கண்ணன் சொல்கிறான் :"அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப - துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு."அர்ஜுனன் கேட்கிறான் :"மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை. காரணம், உள்ளம் சஞ்சலமுடையது.""கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது,"பகவான் கூறுகிறான் :"தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்க முடியும்."இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார் :"கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகு சிரமம். அதுபோலப் பல திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்."- மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது என்பதுபற்றி பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியானயோகமாகும்.சகல காரியங்களுக்கும் - இன்பத்திற்கும் துன்பத்திற்கும், நன்மைக்கும் தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும், புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம்.மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.பகுத்தறிவையும் மனம் ஆக்ரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான். கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது. அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.எந்த அனுபவங்களையும் கொண்டு வருவது மனம் தான்.இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்களை அழித்துவிடுகின்றன.உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.என்ன இந்த மனது?காலையில் துடிக்கிறது. மதியத்தில் சிரிக்கிறது. மாலையில் ஏங்குகிறது. இரவில் அழுகிறது.
"இன்பமோ, துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்." என்றிருக்க மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.கடிவாளம் இல்லாத இந்த மனக் குதிரையை அடக்குவது எப்படி?"வைராக்கியத்தால் முடியும்" என்கிறது கீதை. அதையே சொல்கிறார் பகவான் ராமகிஷ்ணர்.அது என்ன வைராக்கியம்உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது எந்த நிகழ்ச்சிகளுக்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பது.மெழுகு போல் இருக்கும் மனதை மரக்கட்டை போல் ஆக்கவிடுவது.ஆசாபாசங்களில் இருந்து மனதை மட்டும் ஒதுக்கி வைத்து விடுவது. பந்த பாசங்களில் இணங்கிவிடாமல் இருப்பது.பற்றறுப்பது, சுற்றுச் சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்ற முடிவுக்கு வருவது.ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப் பம்பரம்போல் ஆட்டிவைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டு கொள்வது.துன்பத்தைத் தரக்கூடிய விஷயங்களை அலட்சியப்படுத்துவது.இன்பமான விஷயங்களைச் சந்தேகமில்லாமல் ஏற்றுக் கொள்வது.பிறர் தனக்கிழைத்த துன்பங்களை மறந்துவிடுவது, மன்னித்துவிடுவது.முயற்சிகள் தோல்வியுறும்போது, இதற்கு இறைவன் சம்மதிக்கவில்லை. என்று ஆறுதல் கொள்வது.கணநேர இன்பங்களை அவை கண நேர இன்பங்களே என்று முன் கூட்டியே கண்டு கொள்வது.ஆத்மா என்னும் மாயப்புறா அமரும் மாடங்களெல்லாம் நம்முடைய மாடங்களே" என்ற சமநோக்கத்தோடு பார்வையைச் செலுத்துவது.காலையில் இருந்து மாலை வரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குத்தான் என்று அமைதி கொள்வது.சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது. ஆனால் எப்படி இது முடியும்?பகவத் தியானத்தால் முடியும்.அதிகாலையில் ஓர் அரைமணி நேரம், இரவிலே ஓர் அரைமணி நேரம், கோவிலிலோ வீட்டுப் பூஜை அறையிலோ தனிமையில் அமர்ந்து வேறு எதையும் நினைக்காமல் இறைவனையே நினைப்பது.இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மனம் வேறு திசையில் ஓடினால் அதை இழுத்துப் பிடிப்பது.பாசத்திலே மூழ்கிக் கிடந்த பட்டினத்தார் `ஞானி' யானது இப்படித்தான்.
தேவதாசிகளின் உறுப்புகளிலேயே கவனம் செலுத்திய அருணகிரிநாதர், ஆண்டவனின் திருப்புகழைப் பாடியதும், இப்படித்தான்.இயற்கையாகவே கல்வியாற்றல் பெற்றிருக்கும் ஒரு கவிஞன், ஒரு பொருளைப் பற்றிக் கவிதையில் சிந்திக்கும் போது, அவன் மனம் கவிதையிலேயே செல்கிறது.அதில் லயிக்கிறது, ரசிக்கிறது, சுவைக்கிறது.அப்போது ஓர் இடையூறு, குறுக்கீடு வந்தாலும் அவனுக்கு ஆத்திரம் வருகிறது.கண்கள் திறந்திருக்கின்றன. மனம் கவிதையில் ஆழ்ந்து கிடக்கிறது. அப்போது திறந்த கண்ணின் எதிரில் நிற்கும் மனைவிகூட அவன் கண்ணில் படுவதில்லை.மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையை நோக்கி வில்லெடுக்கும் வேடனின் கண்களில் பறவை மட்டும் தெரியுமே தவிர, மரத்திலுள்ள இலைகள், காய்கள், கனிகள் தெரிவதில்லை.கவிஞனுக்கும் வேடனுக்கும் சாத்தியமான மனதின் ஒருமுக நிலையை மற்றவர்களும் பெற முடியும்.அதாவது ஒன்றையே நினைத்தல்.அந்த லயம் கிட்டிவிட்டால் புலன்களும், பொறிகளும் செயலற்றுப் போகின்றன.வாயின் சுவை உணர்வு, நாசியின் மண உணர்வு, கண்களின் காட்சி உணர்வு, செவியின் ஒலி உணர்வு, பிற அங்கங்களின் ஸ்பரிச உணர்வு அனைத்தையும் அடித்துப் போட்டுவிட்டு, புலியைக் கொன்ற வேடன் போல் மனது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதுதான் சரியான லயம்.சங்கீத வித்வான் சரித்தர ஆராய்ச்சி செய்வதில்லை. ஸ்வரங்களையும் ராகங்களையுமே ஆராய்ச்சி செய்கிறான்.ஒரே இடத்தில் ஒரே நிலையில் மனத்தைச் செலுத்தினால் சலனமில்லாத ஒரே உணர்ச்சி தோன்றுகிறது.ஒரு கதை உண்டு!ஒரு தாய் தனது ஒரு மாதக் கைக்குழந்தையோடு தரையிலே பாய் விரித்துப் படுத்திருந்தாள். அப்போது அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் பாம்பு வந்து நின்றது.பாம்பைக் கண்ட உறவினர்கள் பதறினார்கள். துடித்தார்கள்.அந்தப் பாம்பு குழந்தையையும் தாயையும் கடித்து விடப்போகிறதே என்று பார்த்தார்கள்.தாயின் பெயரைச் சொல்லி சத்தமிட்டார்கள். தாய் எழவில்லை. பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் மீது ஒரு மல்லிகைப் பூவை எடுத்துப் போட்டார்கள். தாய் உடனே விழித்துக் கொண்டு, அந்தப் பூவை எடுத்து அப்புறம் போட்டாள்.
தன்னை உதைத்தபோது கூடச் சொரணையில்லாது உறங்கிய தாய், குழந்தை மீது பூ விழுந்ததும் விழித்துக் கொண்டது எப்படி?அந்த உள்ளம் குழந்தையிடமே லயித்துக் கிடந்ததால்தான்.ஈஸ்வர பக்தியில் உடல் உருக, உள்ளம் உருக லயித்துக் கிடந்த அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் மனதை ஒருமுகப்படுத்தியவர்களே.இந்த மனதின் கோலங்களாலேயே நான் பலமுறை தடுமாறி இருக்கிறேன்.ஆசைக்கும் அச்சத்துக்கும் நடுவே போராடி இருக்கிறேன்.ஜனனம் தகப்பனின் படைப்பு, மரணம் ஆண்டவனின் அழைப்பு, இடைப்பட்ட வாழ்க்கை அரிதாரம் பூசாத நடிப்பு என்பதை, நாளாக நாளாக உணர்ந்து வருகிறேன்.இன்னமும் முழுப்பக்குவம் கிட்டவில்லை.திடீர் திடீரென்று மனதில் ஒன்றிருக்க ஒன்று பாய்கிறது.ஒன்றை எடுத்தெறிந்தால், இன்னொன்று ஓடி வருகிறது.ஒரேயடியாக மிதித்துக் கொன்றால்தான் நிம்மதி கிடைக்கும் என்பது தெரிகிறது.என் கால்கள் இன்னும் அந்த வலுவைப் பெறவில்லை. பெற முயல்கிறேன். பெறுவேன்.பிறந்தோருக்காகச் சிரிக்காமலும், இறந்தோருக்காக அழாமலும் பரந்தாமன் கூறியதுபோல் சமநோக்கத்தோடு நின்று மன அமைதி கொள்ள முயல்கிறேன்.அதை நான் அடைந்துவிட்டால், கடவுள் கண்களிலே கண்ணீர் வைத்ததற்கான காரணமும் அடிபட்டுப்போகும்.இவ்வளவையும் நான் சொல்லுவது லௌகிக வாழ்க்கையிலும் நம்மை அமைதிப்படுத்துவதே இந்து மதத்தின் நோக்கம் என்பதை விளக்கத்தான்.லௌகிக வாழ்க்கையைச் செப்பனிடும் இந்து மதக் கருவிகளில் பகவத் கீதையும் ஒன்று என்பதுதான் என் துணிவு

தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்

தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள்

நமது தன்னம்பிக்கையை தேடிப் பெறுவதற்கு, அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய 5 வழிகள்:

என்னும் நூலுக்கு சொக்கன் அவர்கள் குமுதம் இதழில் எழுதிய விமர்சனம்

1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.

2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.

3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.

நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.

5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

தாழ்வுமனப்பான்மையை தவிடுபொடியாக்குங்கள்



உன் ஆன்மாவுக்குள் அத்தனை சக்திகளும் நிறைந்துள்ளன.
நான் ஒரு ஆற்றல்மயமான ஜோதி; இறைவனின்
கண்மணிக்குழந்தை’ என்று உணர்வாயானால், உலகையே
வெல்லும் உன்னத மனிதனாய் வருவாய்!
-பிரம்மா பாபா
இன்றைய தேதியில் உலகம் கொண்டாடும் ஒரு பிரபலம் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் தான். ஒருமுறைஹாக்கிங் சிறு சாலை விபத்தில் சிக்கி லேசான காயமடைந்தார். இது நடந்து சுமார் பத்துமணி நேரத்துக்குள் அமெரிக்காவின் அத்தனை டி.வி. சேனல்களும் அந்த நிகழ்ச்சியைப் பற்றி செய்தி சேகரிக்க அவரது வீட்டின் முன் குவிந்துவிட்டன.
இத்தனை புகழ் பெற்றவராக ஸ்டீவன் ஹாக்கிங் மாறிடக்காரணம் என்ன? அவரது “காலத்தின் சுருக்கமான வரலாறு’ (A Brief History of Time) என்ற புத்தகமா, பிரபஞ்சம் அல்லது பேரண்டத்தைப் பற்றிய அவரது ஆராய்ச்சி களா, பிரபஞ்சத்தின் தோற்றம், கருநிறைகள் (Block holes) போன்றவை பற்றிய அவரது கருத்துக்களா?
ஒரு வகையில் பார்க்கப்போனால் இவையெல்லாமே ஸ்டீவன் ஹாக்கிங்கின் புகழுக்குக் காரணம்தான். குறிப்பாக, சிக்கலான விஞ்ஞான உண்மைகளை உள்ளடக்கிய அவரது புத்தகம் ஜெஃப்ரி ஆர்ச்சர், ராபர்ட் லட்லம் போன்ற நாவலாசிரியர்களின் “பெஸ்ட்செல்லர்’களோடு போட்டி போட்டுக் கொண்டு கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்தது; ஸ்டீவன் ஹாக்கிங்கிற்கு கோடி கோடியாய் பணத்தைக் கொட்ட வைத்தது.
ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி சாதித்தது, ஸ்டீவன் ஹாக்கிங்கின் தன்னம்பிக்கை தான் என்பது ஹாக்கிங்கின் மருத்துவர், மனைவி, நண்பர்கள், பதிப்பகத்தார் ஆகிய எல்லோருமே தெரிந்த ஒரு உண்மைதான். ஹாக்கிங்கின் தளராத தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நவீன விஞ்ஞானத்தைக் கூட வாசகர்கள் விரும்பும் வகையில் ஜனரஞ்சகமாகத் தரமுடியும் என்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வம் மற்றும் உறுதி ஆகியவையே அவரைச் சாதனையாளர் ஆக்கின.
இருபத்தொரு வயதில் ‘Amyotrophic Lateral Sclerosis (ALS)’ என்னும் இயக்க நரம்புசெல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டார் ஸ்டீவன் ஹாக்கிங். இது மிகவும் கொடுமையான நோய், நாளுக்கு நாள் உடலின் பாகங்கள் படிப் படியாக செயலிழந்துகொண்டே வரும். ஆனாலும், மனம் தளர்ந்துவிடாமல் மிகுந்த மன வலிமையோடு, தன்னம்பிக்கையோடு, விடா முயற்சியுடன் அயராது உழைத்தார். ஸ்டீவன் ஹாக்கிங். இரண்டே வருடங்களில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் கெடு விதித்ததை யும் மீறி இன்றைக்கும் தனது 66 வயதில் விஞ்ஞான உலகின் இரண்டாவது ஐன்ஸ்டீன் என்ற புகழோடு ஸ்டீவன் ஹாக்கிங் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்றால் இதற்குக் காரணம் அவரது தன்னம்பிக்கையன்றி வேறு என்ன?
உலகில் எல்லா விலங்குகளின் வளர்ச்சியும் கிடைமட்டத்தில்தான் இருக்கிறது. ஆனால், மனிதன் மட்டும் தான் உயரே வளர்கிறான். தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து நிற்பவனும் அவனே. வளர்ச்சி, முன்னேற்றம், சாதனை இவையெல்லாம் மனிதனுக்கு மட்டுமே சாத்தியம். அளப்பரிய ஆற்றல் நம்மிடம் மட்டுமே இருக்கிறது.
நம் மனதில் கோடிக்கணக்கான சூரியன் களின் ஆற்றல் அழியாத ஜீவ சைதன்யமாக உறைந்திருக்கிறது. ஆனால் நாமோ நமது ஆற்றலை மறந்துவிட்டு, சக்திகளை ஒதுக்கி விட்டு பலவீனர்களாக நம்மைக் கருதிக்கொண்டு ஒருவகை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறோம்; பிரச்சனைகளால் சூழ்ந்து கிடக்கிறோம்; பயம், கவலை, சந்தேகம், வேதனை, விரக்தி போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கிறோம்.
ஒரு கதை உண்டு. பிறந்து கண்கூட விழித்திராத ஒரு சிறிய சிங்கக்குட்டி தன் தாயிடமிருந்து எப்படியோ வழிதவறிவிட்டது. அந்த வழியாக வந்த ஆட்டுமந்தையிடமிருந்து ஒரு ஆடு அந்தச் சிங்கக்குட்டியை எடுத்துவந்து பாலூட்டி வளர்த்தது. நாளடைவில் ஆட்டு மந்தையுடன் வளர்ந்த சிங்கக்குட்டி ஆடு போலவே புல் மேய்ந்து மே! மே! என்று கத்தவும் ஆரம்பித்தது. பெரிய சிங்கமாக அது வளர்ந்து விட்ட போதிலும்கூட, அது அப்படியே தான் ஆட்டு மந்தையோடு மந்தையாக வலம் வந்தது.
சிலகாலம் கழித்து அந்த வழியாக வந்த வேறு ஒரு சிங்கம் தன்னைப் போன்றஒரு சிங்கம் ஆட்டுமந்தையிலுள்ள ஆடுகளுடன் ஒன்றாகப் புல் மேய்வதையும் “மே! மே!’ என்று கத்துவதை யும் பார்த்து அதிசயித்துப் போனது. உடனே அந்த சிங்கத்துடன் பேச விரும்பியது. ஆனால், ஆட்டு மந்தைச் சிங்கமோ இந்த சிங்கத்தைப் பார்த்து ஆடுகளைப் போலவே பயந்து ஓடியது. எனவே இரண்டாவது சிங்கத்தால் ஆட்டு மந்தைச் சிங்கத்துடன் பேசமுடியாமல் போனது.
ஒருநாள் இரண்டாவது சிங்கத்துக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சிங்கம் ஆட்டுமந்தைச் சிங்கத்தைப் பார்த்து, “நீ ஒரு சிங்கம். ஆட்டு மந்தையுடன் ஏன் சுற்றித் திரிகிறாய்?’ என்று கேட்டது. ஆனால், முதல் சிங்கமோ, “இல்லை, நான் ஆடு தான்’ என்ற படியே “மே! மே!’ என்று கத்தியது. உடனே இரண்டாவது சிங்கம் “அப்படியா என்னுடன் வா’ என்று கூறியபடியே முதல் சிங்கத்தை இழுத்துச் சென்று சற்றுத் தொலைவிலிருந்த ஒரு நீர்நிலைக்கு அழைத்துச் சென்று தத்தம் உருவப் பிரதிபலிப்புகளைக் காட்டி “என்னுடைய உருவம், உன்னுடைய உருவம் இரண்டையும் தண்ணீருக்குள் பார்’ என்றது. ஆட்டுமந்தைச் சிங்கமும் தண்ணீருக்குள் பார்த்தபோது தானும் ஒரு சிங்கம் தான் என்று உணர்ந்தது. அத்துடன் அந்த சிங்கத்தின் கத்தல் அகன்றதோடு கம்பீரமான முழக்கம் அதன் வாயிலிருந்து வெளிப்பட்டது.
மனிதர்களும் இப்படித்தான்! தத்தம் சிறுவயதிலிருந்தே தவறான கருத்துக்கள் திணிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். நாம் பலவீனர்கள், ஆற்றல் குறைந்தவர்கள் என்றெல்லாம் நம்மை நாமே நினைத்திடும் நிலைக்கு ஆளாகிக் கொள்கிறோம். வழிதவறிய சிங்கம் போலவே நமது ஆற்றலை நாமே குறைத்து மதிப்பிட்டு ஆடுகளைப் போல் கதறிப் பதறித் தவிக்கிறோம்.
நம்மிடம் பலவீனம் இருப்பதாக நாம் ஏன் நினைக்க வேண்டும்? நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் இந்த உலகமும் தோற்றமளிக்கும். இருட்டில் ஒரு வெட்டப்பட்ட மரம் நிற்கிறது. அதைப் பார்க்கும் திருடன் அதைப் போலீஸ்காரர் என்று நினைத்து பயப்படுகிறான். காதலியைத் தேடிவரும் காதலனோ அவள்தான் அங்கு நிற்கிறாள் என்று எண்ணி ஆசையுடன் அதை நோக்கி விரைகிறான். பேய்க்கதைகள் கேட்ட ஒரு சிறுவனோ அதை ஆவி என்று கருதி ஓடி ஒளிகிறான். ஆனால், இத்தனைக்கும் அந்த மரம் மரமாகவே தான் இருக்கிறது.
நாம் ஆற்றல் நிறைந்தவர்கள்; நமது மனம் ஆற்றலின் இருப்பிடம். “நான் ஆற்றலின் உறைவிடம், சக்தி சொரூபம் ஆகிய ஆன்மா, இறைவனின் செல்லக்குழந்தை’ என்றபலம் மிக்க எண்ணங்கள் நமது மனங்களில் உதயமாகட்டும். அப்போது தொடர்ச்சியாக எண்ணப்படும் இந்த எண்ணங்களின் வலு நம்மைத் தூக்கி நிறுத்தி சாதனையாளர்களாக்கும்.
இப்போது நாம் எழவேண்டிய நேரம் வந்துவிட்டது. மனதின் மகத்தான ஆற்றலை மானிட குலம் புரிந்து கொள்ளும் தருணம் வாய்த்துவிட்டது. “எழுமின்! விழிமின்!’ என்ற விவேகானந்தரின் வீரவார்த்தைகள் காற்றில் பறக்கும் பஞ்சுக்கே, விடுபட்ட துப்பாக்கிக் குண்டின் வேகத்தைத் தரும்போது நமக்குத் தராதா என்ன? எனவே இனியும் வேண்டாம் உறக்கம். அறியாமையும், சோம்பலும், கவன மின்மையும் நமது தேசிய சொத்துக்களாக இருந்தது போதும். இனி விழித்திடுவோம்; எழுந்திடுவோம்; வெற்றிப்பாதையில் வீரநடை போட்டிடுவோம்!
தளராத தன்னம்பிக்கையோடு வெற்றிநடை போடவேண்டியது நாம் மட்டுமல்ல. நமது அருமைக் குழந்தைகளின் மனதிலும் “நாம் ஆற்றல் வாய்ந்தவர்கள்; சாதிக்கப் பிறந்தவர்கள்’ என்ற நம்பிக்கையூட்டும் நேர்மறை எண்ணங் களையே, வீறுகொண்டு எழவைக்கும் வெற்றிச் சிந்தனைகளையே விதைப்போம்.
உன்னத சிந்தனைகளால் உள்ளங்களை நிரப்புவோம்; உயரங்களைத் தொடும் உரம்வாய்ந்த உறுதிமனிதர்கள் நிறைந்த ஏற்றமிகு எதிர்காலத்தை எளிதாய்ப் படைத்திடுவோம்.
இது ஒரு சாத்தியமான சத்தியம்.